சைகை மட்டும் தான் நான்; கெட்ட வார்த்தை பேசியது அவங்க தான்: வடிவேலு ஃபேமஸ் காமெடி சீன் உருவாத விதம்!

கடந்த 2001-ம் ஆண்டு வெளியான படம் தான் மனதை திருடிவிட்டாய். பிரபுதேவா, வடிவேலு, காயத்ரி ஜெயராமன், கௌசல்யா, ரஞ்சித், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் இயக்குனர் சிறுத்தை சிவா ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருப்பார்.

கடந்த 2001-ம் ஆண்டு வெளியான படம் தான் மனதை திருடிவிட்டாய். பிரபுதேவா, வடிவேலு, காயத்ரி ஜெயராமன், கௌசல்யா, ரஞ்சித், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் இயக்குனர் சிறுத்தை சிவா ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருப்பார்.

author-image
WebDesk
New Update
Vadivelu

வடிவேலு, பிரபுதேவா இணைந்தாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் இருவரும் காமெடியில் பின்னி பெடல் எடுப்பார்கள். அந்த வகையில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரு படத்தில் நாயகி கெட்டவார்த்தை பேசுவது போல் வந்த காட்சி பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. உண்மையில் இந்த காட்சிகள் எப்படி எடுக்கப்பட்டது தெரியுமா?

Advertisment

கடந்த 2001-ம் ஆண்டு வெளியான படம் தான் மனதை திருடிவிட்டாய். பிரபுதேவா, வடிவேலு, காயத்ரி ஜெயராமன், கௌசல்யா, ரஞ்சித், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் இயக்குனர் சிறுத்தை சிவா ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருப்பார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்தை ஆர்.டி.நாராயணமூர்த்தி என்பவர் இயக்கியிருந்தார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றிருந்தது.

குறிப்பாக, வடிவேலு – விவேக், பிரபுதேவா இவர்கள் மூவருக்கும் இடையேயான காட்சிகள் இன்றும் ரசிக்கும் வகையில் படமாக்கப்பட்டிருக்கும். ஒரு பார்ட்டியின்போது தெரியாமல் நடந்த ஒரு சம்பவத்தால் ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அவளை சந்தோஷப்படுத்த ஹீரோ எடுக்கும் முயற்சி, ஹீரோ காதலிக்கும் பெண்ணின் செயல் க்ளைமேக்ஸ் காட்சியில் ஒரு பெரிய ட்விஸ்ட் என படத்தின் திரைப்பதை அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும். இன்றும் இந்த படம் வரவேற்பை பெற்ற தவறவில்லை.

இந்த படத்தில் இசை கல்லூரிக்கு படிக்க வரும் காயத்ரி ஜெயராமை காதலிப்பதாக பிரபுதேவா சொல்லிவிட, அவரை நூலகத்திற்கு அழைத்து வைத்து திட்டுவார். இந்த காட்சி பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக, இந்த காட்சியில், வடிவேலு கொடுத்த டைமிங் ரியாக்ஷன்கள் இன்றைக்கும் காமெடி மீம்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காட்சியில் முழுவதும் கெட்டவார்த்தை பேசி நடித்த நடிகை காயத்ரி ஜெயராம் அந்த வார்த்தைகளுக்கு தனக்கு அர்த்தமே தெரியாது என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

இந்த காட்சி பள்ளியில் எடுக்கப்பட்டது. காட்சியில் நடிக்கும்போது, பிரபுதேவா மற்றும் வடிவேலு இருவரும் முன் பென்ச்சில் அமர்ந்துகொண்டு மொத்த கெட்டவார்த்தையும் பிராம்ப்டிங் செய்தனர்.  அவங்க சொல்ல சொல்ல நா வெறும் சைகை மட்டுமே செய்தேன். அந்த வார்தைகள் அனைத்தும் அவர்கள் பேசியது தான். நான் என்ன சொல்கிறேன், அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்பது எனக்கு தெரியாது. சோறு திங்கிறீயா என்பது மட்டும் தான் நான் சொந்தமாக பேசிய வசனம். பாக்கி எல்லாமே இவங்க பிராம்ப்டிங் தான். அப்புறம் அந்த சீன் முடிந்த பிறகுதான் உட்காந்து ஒவ்வொரு வார்த்தைக்கும் மீனிங் என்னனும் கேட்டு தெரிந்துகொண்டேன். இப்போ நினைத்தாலே சிரிப்பு வருகிறது என்று கூறியுள்ளார். 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: