நான் 1000 முறை ரசிக்கும் சண்டை; 23 மணி நேரம் படமாக்கப்பட்ட ஒரே காட்சி: வைகோ சொன்னது எந்த படம்?

தேவர் பிலிம்ஸ் சார்பில் சின்னப்ப தேவர் தயாரிக்க அவரது தம்பி எம்.எ. திருமுகம் இயக்கத்தில் வெளியான படம் தாய்க்கு பின் தாரம். தேவர் பிலிம்ஸ், சின்னப்ப தேவர், திருமுகம் இருவருக்குமே இதுதான் முதல் படம்.

தேவர் பிலிம்ஸ் சார்பில் சின்னப்ப தேவர் தயாரிக்க அவரது தம்பி எம்.எ. திருமுகம் இயக்கத்தில் வெளியான படம் தாய்க்கு பின் தாரம். தேவர் பிலிம்ஸ், சின்னப்ப தேவர், திருமுகம் இருவருக்குமே இதுதான் முதல் படம்.

author-image
WebDesk
New Update
MGR Chinnappa devar

சினிமா உலகில் நெருங்கய நட்புக்கு பல உதாரணங்கள் இருந்தாலும், எம்.ஜி.ஆர் – சின்னப்ப தேவர் நட்பு பலரும் அறிந்த ஒன்று. எம்.ஜி.ஆர் நடிப்பில் பல படங்களை தயாரித்த சின்னப்ப தேவர் எம்.ஜி.ஆருடன் ஒரு சில படங்களில் நடித்துள்ளார், அந்த வகையில் தாய்க்கு பின் தாரம் என்ற படத்தில் எம்.ஜி.ஆர் சின்னப்ப தேவர் இருவருக்கும் இடையிலான சண்டைக்காட்சி குறித்து வைகோ கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடம் பிடித்து 3-முறை முதல்வர் இருக்கையில் அமர்ந்தவர் எம்.ஜி.ஆர். சிறுவயதில் ஒரு நாடக நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கிய எம்.ஜி.ஆர், அதன்பிறகு, சதிலீலாவதி என்ற படத்தில் காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் சிறிய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்த இவர், 10 வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக உருவெடுத்தார். தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்த எம்.ஜி.ஆருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லை.

அதே சமயம் மனம் தளராத எம்.ஜி.ஆர் நாடோடி மன்னன் என்ற படத்தை இயக்கிய தயாரித்து நடித்து வெற்றி கண்டார். அதன்பிறகு பல இயக்குனர்களிடம் கூட்டணி அமைத்து வெற்றியை பெற்ற எம்.ஜி.ஆர், சாண்டோ எம்.எம்.எ சின்னப்ப தேவரின் நட்பு கிடைத்து அவரது தயாரிப்பில் நடிக்க தொடங்கினார். தேவர் பிலிம்ஸ் சார்பில் சின்னப்ப தேவர் தயாரிக்க அவரது தம்பி எம்.எ. திருமுகம் இயக்கத்தில் வெளியான படம் தாய்க்கு பின் தாரம். தேவர் பிலிம்ஸ், சின்னப்ப தேவர், திருமுகம் இருவருக்குமே இதுதான் முதல் படம்.

பானுமதி நாயகியாக நடித்த இந்த படத்தில், பாலையா, காகா ராதா கிருஷ்ணன், கண்ணாம்பா உள்ளிட்ட பலருடன், சின்னப்ப தேவர் மாயாண்டி என்ற முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார், இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக இதில் எம்.ஜி.ஆர் சின்னப்ப தேவர் மோதும் சண்டைக்காட்சி பெரிய வரவேற்பை பெற்றிருந்தது, இது குறித்து வைகோ ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

Advertisment
Advertisements

அதில், நான் சின்ன வயதில் பார்த்த தாய்க்கு பின் தாரம் படம் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் கிராமத்து ஆளு, எனக்கு சண்டைககாட்சி ரசிப்பவன். எனக்கு கொஞ்சம் சிலம்பமும் தெரியும். எவ்வளவோ வாத்தியார் சண்டையை பார்த்திருக்கிறேன். சாண்டோ சின்னப்ப தேவர் ஒரிஜினலாப சண்டை பற்றி படித்தவர். எம்.ஜி.ஆரும் சிலம்பம் பயிண்றவர். இருவருக்கும சண்டைக்காட்சி. முதல் நாள் காலை 7 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் காலை 6 மணிக்கு தான் இந்த ஒரு காட்சி படமாக்கப்பட்டது.

எம.ஜி.ஆர் முறையாக சிலம்பம கற்றவர் தான் என்றாலும், அவர் இரான் படங்களை பார்த்து தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கிக்கொண்டார். இந்த படத்தில் ஒரு சண்டைக்காட்சியில்.ஒரு பக்கம் 50 பேரை விரட்டிவிட்டு சின்னப்ப தேவர் வருவார். மறுபக்கம் 50 பேரை விரட்டிவிட்டு எம்.ஜி.ஆர் வருவார். இருவரும் மோதிக்கொள்வார்கள். இந்த காட்சியை பென்கர் படத்தில் வரும் ஷெரியர் ட்ரேஸ் மட்டும் 1000 முறை பார்ப்பேன். அந்த மாதிரி இந்த சண்டைக்காட்சியை மட்டும் பார்த்தால் அப்படிததான் இருக்கும் என்ற கூறியுள்ளார். 

Tamil Cinema News Tamil Cinema Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: