Advertisment

''பொன்னெழில் பூத்தது புது வானில்''... சோக பாடலை டூயட்டாக மாற்றிய எம்.ஜி.ஆர் : காரணம் என்ன?

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1965-ம் ஆண்டு வெளியான படம் கலங்கரை விளக்கம். கே.சங்கர் இயக்கத்தில் ஜி.என்.வேலுமணி தயாரித்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
MGR Kalangari Vilakkam

கலங்கரை விளக்கம் படத்தில் எம்.ஜி.ஆர்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான கலங்கரை விளக்கம் திரைப்படத்தில், இடம் பெற்ற ஒரு சோகப்பாடல், காதல் பாடலாக மாற்றி படப்பிடிப்பு நடத்தப்பட்டு வெளியாகியுள்ளது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1965-ம் ஆண்டு வெளியான படம் கலங்கரை விளக்கம். கே.சங்கர் இயக்கத்தில் ஜி.என்.வேலுமணி தயாரித்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜா தேவி நடித்த இந்த படத்தில், நமபியார் நாகேஷ், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அமெரிக்கன் படமாக வெர்டிகோ என்ற படத்தின் தழுவலாக வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் பஞ்சு அருணாச்சலம் 2 பாடல்களை எழுதியிருந்தார். இந்த படம் வெளியான காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர் – கவியரசர் கண்ணதாசன் இடையே மோதல் போக்கு இருந்த நிலையில், பஞ்சு அருணாச்சலம் பாடல் ஆசிரியராக மாறியுள்ளார். அதேபோல் அவர் எழுதிய இரு பாடல்களுமே கவிநயத்துடன் எழுதியிருந்தார். இதில் எதார்த்தமாக ஒரு பாடலை கேட்ட எம்.ஜி.ஆர் தயாரிப்பாளர் வேலுமணியிடம் மீண்டும் அந்த பாடலை போடுங்கள் என்று கூறியுள்ளார்.

இப்படியே 3 முறை அந்த பாடலை கேட்ட எம்.ஜி.ஆர், இந்த பாடலை எழுதியது யார் என்று கேட்க, பஞ்சு அருணாச்சலம் தான் எழுதினார் என்று வேலுமணி கூறியுள்ளார். ஆனால் எம்.ஜி.ஆர் இந்த பாடல் கண்ணதாசன் எழுதியது. இதை தூக்கிய துர போட்டுவிட்டு, வேறு ஒரு கவிஞரை வைத்து எழுதுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் பாடலை விட மனமில்லாத தயாரிப்பாளர் வேலுமணி, எம்.எஸ்.விஸ்வநாதனிடம் இது பற்றி கூறியுள்ளார்.

அதன்பிறகு எம்.ஜி.ஆரை சந்தித்த எம்.எஸ்.வி, இந்த 2 பாடல்களையும் எழுதியது பஞ்சு அருணாச்சலம் தான். ஒன்று அவர் எழுதிய பாட்டுக்கு நான் மெட்டு போட்டேன். மற்றொன்று நான் போட்ட மெட்டுக்கு அவர் பாடல் எழுதினார் என்று விளக்கியுள்ளார். அதன்பிறகு அந்த 2 பாடல்களும் படத்தில் சேர்க்கப்பட்டது. இதில் ஒரு பாடல் தான் ‘’பொன்னொழில் பூத்தது புது வானில்’’ என்ற பாடல்.

படத்தில் தற்கொலை செய்துகொள்ள செல்லும் காதலியை காதலன் தடுத்து நிறுத்த அவளை காப்பாற்றும்போது வரும் பாடல். இந்த சூழ்நிலையில், எப்படி காதல் பாட்டு பாட முடியும் என்பதால் சோகப்பாடலாக எழுதியுள்ளனர். ஆனால் பொதுவாக எம்.ஜி.ஆர் படத்தில் இருக்கும் டூயட் பாடல் இந்த படத்தில் இல்லை. விநியோகஸ்தர்களுக்கு இது ஒரு குறையாக இருக்கும் என்பதால் சோகமான இந்த பாடலை காதல் டூயட் பாடலாக மாற்றி இறுதியில் நடனத்துடன் முடித்திருப்பார் எம்.ஜி.ஆர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mgr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment