தமிழ் சினிமாவில் தனது ஆளுமையின் மூலம் உச்சத்தை தொட்ட எம்.ஜி.ஆர் தான் இயக்கி நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கான இசையமைப்பாளராக இவர் செட் ஆகமாட்டார் என்று கவியரசர் கண்ணதாசன் கூறியதை தொடர்ந்து இசையமைப்பாளரை மாற்றியுள்ளார்.
எம்.ஜி.ஆர் முதன் முதலில் இயக்கி தயாரித்து நடித்த படம் நாடோடி மன்னன். இந்த படத்திற்கு பல தடைகள் வந்திருந்தாலும், படத்தின் பாதியில் நடிகை பானுமதி விலகியிருந்தாலும், அதை பற்றி கவலைப்படமாமல் படத்தை இயக்கிய முடித்தார். நாடோடி மன்னன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
எம்.ஜி.ஆருக்கு பெரிய லாபத்தை எடுத்து கொடுத்தது. அதன்பிறகு பல படங்களில் நடித்த எம்.ஜி.ஆர் மீண்டும் தயாரிப்பு இயக்கம் நடிப்பு என்று இறங்கிய படம் உலகம் சுற்றும் வாலிபன். முதல்முறையாக வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இந்த படம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவுக்கும் புதுமையாக அமைந்தது.
இந்த படத்தை தொடங்கும்போது படத்திற்கு இசை குன்னக்குடி வைத்தியநாதன் என்று கூறிய எம்.ஜி.ஆர் பாடல்கள் நீங்கள் தான் எழுத வேண்டும் என்று கவிஞர் கண்ணதாசனிடம் கூறியுள்ளார். இதை கேட்ட கண்ணதாசன், சரி என்று சொல்லி, பாடல் எழுத தொடங்கியுள்ளார். முதல் பாடலில் சரணம் மட்டும் எழுதி விட்டு தனக்கு கொஞ்சம் வேலை இருப்பதாகவும் பின்னர் வந்து பல்லவி எழுதி தருவதாக கூறிவிட்டு கண்ணதாசன் கிளம்பியுள்ளார்.
அடுத்த நாள் எம்.ஜி.ஆரை தொலைபேசியில் தொடர்புகொண்ட கண்ணதாசன், இது உலகம் முழுவதும் படமாக்கப்படும் ஒரு படம். அனைவரும் வெஸ்டர்ன் இசையை கேட்பார்கள். ஆனால் குன்னக்குடி இசை இதற்கு சரியாக வராது. எம்.எஸ்.விஸ்வநாதன் தான் இதற்கு சரியான இசையை கொடுப்பார். அதனால் அவரை படத்திற்கு இசையமைப்பாளராக கமிட் செய்தால் நான் பாடல் எழுதுகிறேன். குன்னக்குடி வைத்தியநாதனுக்கு கொடுத்த வாக்குக்காக அவருக்கு வேறு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட எம்.ஜி.ஆர் யோசித்து சொல்வதாக கூறி போனை வைத்துள்ளார். அதன்பிறகு ஒரு மாத காலமாக எம்.ஜி.ஆர் கண்ணதாசனை தொடர்புகொள்ளாத நிலையில், கண்ணதாசனும் அதனை மறந்துவிட்டார். ஆனால் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் பணிகள் தொடர்ந்து நடந்து வந்துள்ளது. அதன்பிறகு ஒருநாள் கண்ணதாசனை தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர் நீங்கள் சொல்வது சரிதான். படத்திற்கு எம்.எஸ்.வி தான் இசை நீங்கள் பாடல் எழுதுங்கள் என்று கூறியுள்ளார். அதன்பிறகு கண்ணதாசன் சில பாடல்களையும் வாலி சில பாடல்களையும் எழுதியுள்ளார். அதேபோல் குன்னக்குடி வைத்தியநாதனுக்கு 1977-ம் ஆண்டு வெளியான நவரத்தினம் என்ற படத்தில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் எம்.ஜி.ஆர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“