Advertisment

சிவாஜி படத்தால் லேட்... எம்.ஜி.ஆரிடம் மன்றாடி மன்னிப்பு கேட்ட சரோஜா தேவி

எம்.ஜி.ஆர் நடிப்பில் திருடாதே படத்தின் படப்பிடிப்பு நடந்த அதே நேரத்தில் சிவாஜியுடன் விடிவெள்ளி படத்தில் நடித்துக்கொண்டிருந்தார் சரோஜா தேவி.

author-image
WebDesk
New Update
MGR Saroja Devi M

எம்.ஜி.ஆர் - சரோஜா தேவி

எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படத்தின் மூலம் பெரும் புகழ்பெற்ற நடிகை சரோஜா தேவி, சிவாஜி படத்தின் காரணமாக, எம்.ஜி.ஆர் படத்தின் படப்பிடிப்புக்கே தாமதாமாக வந்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

1961-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான படம் திருடாதே. சரோஜா தேவிநம்பியார்கே.ஏ.தங்கவேலுஎம்.என்.ராஜம் ஆகியோர் நடித்திருந்த இந்த படத்திற்கு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார், பி.நீலகண்டன் இயக்கிய இந்த படத்திற்கு சின்ன அண்ணாமலை கதை எழுதிய நிலையில்கண்ணதாசன் திரைக்கதை எழுதியிருந்தார். இந்த படத்திற்காக முன்னணி நடிகைகள் கால்ஷீட் கிடைக்க தாமதமாகும் என்பதால்அப்போது வளர்ந்து வரும் நடிகையாக இருந்த சரோஜா தேவி நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோதுஒருநாள் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்படும் சூழல் உருவானதால், தயாரிப்பாளராக இருந்த சின்ன அண்ணாமலைக்கு படத்தின் செலவுடன் சேர்த்த லாபமாக குறிப்பிட்ட அளவு பணம் கொடுக்கப்பட்டு, கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.சீனிவாசன் படத்தை தனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

6 மாதங்கள் கழித்து படப்பிடிப்பு தொடங்கியபோதுசரோஜா தேவி பல வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நாயகியாக வலம் வந்த நிலையில், அப்போது சிவாஜியுடன் விடிவெள்ளி படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். ஒருநாள் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின்போது, நெருப்பில் இருந்து சிவாஜி சரோஜா தேவியை காப்பாற்றுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அந்த காட்சி முடிய தாமதமானதால், ரியாலிட்டிக்காக மீண்டும் முகத்தில் தீப்பிடித்த கருமை பூச முடியாது என்பதால் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்துள்ளது.

இந்த படப்பிடிப்பு காலை 5 மணிக்கு முடிந்த நிலையில், அவசர அவசரமாக வீட்டுக்கு சென்ற சரோஜா தேவி, குளித்துவிட்டு உடனடியாக திருடாதே படத்தின் படப்பிடிப்புக்கு சென்றுள்ளா. எம்.ஜி.ஆர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் தயாராக இருந்த போதும்சரோஜா தேவி தாமதாமாக படப்பிடிப்புக்கு வந்ததால், எம்.ஜி.ஆர் கோபத்தில் இருந்துள்ளார். இதை பார்த்த சரோஜா தேவி, வணக்கம் என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடிச்சென்றுள்ளார். மேக்கப் போட்டு வந்து எம்.ஜி.ஆரிடம் மன்னிப்பு கேட்டு மன்றாட, அவரே தெரியும் காலைவரை சிவாஜி பட ஷூட்டிங் நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.

அதே சமயம் இப்போது நாம் காதல் காட்சியில் நடிக்க இருக்கிறோம். அதற்கு தயாராகுங்கள் என்று எம்.ஜி.ஆர் சொன்னாலும் சரோஜா தேதி பதட்டமாகவே இருந்துள்ளார். அதே பதட்டத்துடனே அந்த பாடல் காட்சியில் நடித்துள்ளார். அந்த பாடல் தான் ‘’என் அருகே நீ இருந்தால்’’ என்ற பாடல். இந்த படத்திற்கு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தாலும்இந்த பாடலுக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mgr saroja devi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment