Advertisment

சிகிச்சையில் எம்.ஜி.ஆர்... ஏளனம் பேசிய எதிரிகள்: பதிலடி கொடுத்த வாலி பாடல்

தமிழ் சினிமாவில் பன்முறை திறமை கொண்ட நடிகர்களில் முக்கியமானவராக இருந்த எம்.ஜி.ஆர் 1967-ம் ஆண்டு ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வந்தார்.

author-image
WebDesk
New Update
Vaali MGR Classic

கவிஞர் வாலி - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்

எம்.ஆர்.ராதா சுட்டதால் காயமடைந்த எம்.ஜி.ஆர் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தபோது, அவர் தூப்பாக்கியால் சுடப்படுவதற்கு முன்பு கவிஞர் வாலி எம்.ஜி.ஆருக்காக எழுதிய ஒரு பாடல் அப்படியே பலித்துள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் பன்முறை திறமை கொண்ட நடிகர்களில் முக்கியமானவராக இருந்த எம்.ஜி.ஆர் 1967-ம் ஆண்டு ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வந்தார். அதே சமயம் அவருக்கும் நடிகர் எம்.ஆர்.ராதாவுக்குமான மோதல் அதிகரித்து வந்தது. இந்த நிலையில், எம்.ஜி.ஆர் நடித்த காவல்காரன் படத்திற்கான பாடல் பதிவு நடைபெற்று வந்துள்ளது.

இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்தார். இதில் நாயகி நினைத்தவுடன் நாயகன் வந்துவிடுவார். அப்போது நாயகனை நினைத்து நாயகி பாடும் ஒரு பாடல் என்று சொல்ல, வாலி தனது கவித்துவத்தின் மூலம் பாடல் எழுதி கொடுத்துள்ளார். அந்த பாடலும் அனைவருக்கும் பிடித்துபோய், ரெக்கார்டிங் முடிந்து ஷூட்டிங் போக இருந்தது.

ஆனால் ஒரு சில நாட்களில் காவல்காரன் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இதற்கு காரணம் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டுவிட்டார். இதனால் எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இறந்துவிட்டார், என்றும், எம்.ஜி.ஆரின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது என்றும் கூற தொடங்கினர். மேலும் அவர் இனி சினிமாவுக்கு வந்தாலும், இனி முன்புபோல் செயல்பட முடியாது என்றும் கூறியுள்ளனர்.

ஓரிரு வருடங்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய எம்.ஜி.ஆர் உடல்நிலை தேறி மீண்டும் நடிக்க தொடங்குகிறார். துப்பாக்கிச்சூடு காரணமாக நிறுத்தப்பட்ட அத்தனை படங்களின் ஷூட்டிங்கும் உடனடியாக தொடங்கியது. இதில் முதலில் காவல்காரன் படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. எம்.ஜி.ஆர் சுடப்படுவதற்கு முன்பாக அவருக்காக வாலி எழுதிய அந்த பாடல் படமாக்கப்படுகிறது

தான் மருத்துவமனையில் இருந்த காலக்கட்டத்தில் தன்னை ஏளனமாக பேசி, இனி தனது வாழ்க்கை அவ்வளவுதான் என்று கூறிய அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் வகையில், வந்த பாடல் தான் ‘’நினைத்தேன் வந்தாய் 100 வயது கேட்டேன் தந்தாய் ஆசை மனது’’ என்ற பாடல். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று திரும்பிய எம்.ஜி.ஆரை வரவேற்கும் விதமாக இந்த பாடல் அமைந்தது. ஆனாலும் இந்த பாடல் எம்.ஜி.ஆர் சுடப்படுவதற்கு முன்பு எழுதிய பாடல் என்பது ஆச்சரியமான உண்மை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mgr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment