இந்த பாட்டுக்கு என்னால டியூன் போட முடியாது; கைவிட்ட இசை அமைப்பாளர்கள், தூக்கி நிறுத்திய எம்.எஸ்.வி: எந்த பாட்டு தெரியுமா?

இசையில் உச்சம் தொட்டாலும், அதை தன் தலையில் ஏற்றுக்கொள்ளாதவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். அதேபோல் மனிதன் உணரும் அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது வரிகள் மூலம் உயிர் கொடுத்தவவர் கவியரசர் கண்ணதாசன்.

இசையில் உச்சம் தொட்டாலும், அதை தன் தலையில் ஏற்றுக்கொள்ளாதவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். அதேபோல் மனிதன் உணரும் அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது வரிகள் மூலம் உயிர் கொடுத்தவவர் கவியரசர் கண்ணதாசன்.

author-image
WebDesk
New Update
Kannadassan MSV Classic

தமிழ் சினிமாவில் பல்வேறு இசை அமைப்பாளர்கள் பல ஹிட் பாடல்களை கொடுத்திருந்தாலும் எம்.எஸ.வி - கண்ணதாசன் போன்ற ஒரு கூட்டணி அமைந்ததே இல்லை, இனி அமையப்போவதும் இல்லை என்று பலர் சொல்வதுண்டு. இந்த கூட்டணி கொடுத்த ஒரு ஹிட் பாடலின் வரலாறு பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisment

இசையில் உச்சம் தொட்டாலும், அதை தன் தலையில் ஏற்றுக்கொள்ளாதவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். அதேபோல் மனிதன் உணரும் அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது வரிகள் மூலம் உயிர் கொடுத்தவவர் கவியரசர் கண்ணதாசன். இவர் இருவருக்கும் இடையே இசை அமைப்பாளர் கவிஞர் என்பதை தாண்டி நெருக்கமான நட்பு இருந்துள்ளது, அதற்கு உதாரணமாக பல தகவல்களை அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தற்போதுவரை கூறி வருகின்றனர்.

எம்.எஸ்.வி போட்ட அத்தனை டியூனுக்கும் பாடல்கள் கொடுத்துள்ள கண்ணதாசன், தனியாக எழுதிய பாடல்களுக்கு ஏற்றபடி எம்.எஸ்.வி இசையும் அமைத்துள்ளார். அந்த வகையில் இவர்கள் கூட்டணியில் ஒரு பாடல் உருவாகும்போதுதே அந்த பாடல் ஹிட் ஆகாது என்று பலரும் விமர்சித்திருந்தாலும் அந்த பாடல் பெரிய ஹிட்டாக அமைந்தது என்பது வரலாறு. அந்த பாடல் 'அத்தான் என்னத்தான்' என்ற பாடல். 1961-ம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான பாவ மன்னிப்பு திரைப்படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது.

இந்த பாடலை எழுதிய கண்ணதாசன், பல இசை அமைப்பாளர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் அனைவருமே இந்த பாடல் டியூனில் நிற்காது, இதற்கு இசை அமைக்க முடியாது என்று சொல்லி மறுத்துள்ளனர். ஆனால் பாவ மன்னிப்பு திரைப்படத்திற்கு இசை அமைக்கும்போது அவசரமாக ஒரு பாடல் தேவைப்பட்டுள்ளது. அப்போது எம்.எஸ்.வியிடம் கவியரசர் கண்ணதாசன் இந்த பாடலை எழுத்து கொடுத்துள்ளார். இந்த பாடலுக்கு இசை அமைத்த எம்.எஸ்.வி, பி.சுசீலாவுக்கு இந்த பாடலை பாடும் வாய்ப்பை கொடுத்துள்ளார்.

Advertisment
Advertisements

பாடலை சொல்லிக்கொடுக்கும்போது, அத்தான் சின்ன கேப், அடுத்து என்னத்தான் என்று வரும். இப்படி பல கேப்கள் பாடலில் இருந்தால் யார் கேட்பார்கள் கண்டிப்பாக இந்த பாட்டு வொர்க்அவுட் ஆகாது என்று பலர் கூறியுள்ளனர். ஆனால் தங்களை நம்பிய எம்.எஸ்.வி கண்ணதாசன் இருவரும் தைரியமாக இந்த பாடலை பதிவு செய்துள்ளனர். அவர்கள் எதிர்பார்த்ததை விடவும் இந்த பாடல் பெரிய ஹிட்டாக அமைந்தது. இந்தி பாடகி லதா மங்கேஷ்கர் கூட இந்த பாடலை கேட்டு ஆச்சரியப்பட்டதாக எம்.எஸ்.வி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

Tamil Cinema Update Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: