Advertisment

மரணமடைந்த எம்.எஸ்.வி... அஞ்சலி செலுத்த வந்த எஸ்.ஜானகி : என்ன சொல்லி கலங்கினார் தெரியுமா?

எம்.எஸ்.விஸ்வநாதன், தனது இசையில் டி.எம்.எஸ்., பி.சுசீலா, எஸ்.ஜானகி, யேசுதாஸ் உள்ளிட்ட பல முன்னணி பாடகர்களுக்கு பல பாடல்களை பாடும் வாய்பினை கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MSV S Janaki

எம்.எஸ்.வி - எஸ்.ஜானகி

தமிழ் சினிமாவின் தனது இனிமையான குரலின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள பாடகி எஸ்.ஜானகி, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இறந்த போது அவர் அருகில் அமர்ந்துகொண்டு உருக்கமாக பேசி அழுதுள்ளார்.

Advertisment

இந்திய சினிமாவின் முன்னணி பின்னணி பாடகிகளில் முக்கியமானவர் எஸ்.ஜானகி. 1957-ம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜன் இயக்கத்தில் மகதல நாட்டு மேரி என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமான இவர்தொடர்ந்துகே.வி.மகாதேவன்எம்.எஸ்.விஇளையராஜாசங்கர் கணேஷ்தேவாஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

கடைசியான ஜீவா நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான திருநாள் படத்தில் தந்தையும் யாரோ என்ற பாடலை பாடியிருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் இந்திய தெலுங்கு கன்னடம் மலையாளம்இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள எஸ்.ஜானகிபல முன்னணி இசையமைப்பாளருகளின் இசையில் ஹிட் பாடல்கள கொடுத்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

எந்த பாடல் யார் பாடினால் நன்றாக இருக்கும் என்பதை கணிப்பதில் வல்லராக இருந்த எம்.எஸ்.விஸ்வநாதன், தனது இசையில் டி.எம்.எஸ்., பி.சுசீலா, எஸ்.ஜானகி, யேசுதாஸ் உள்ளிட்ட பல முன்னணி பாடகர்களுக்கு பல பாடல்களை பாடும் வாய்பினை கொடுத்துள்ளார். இதில் குறிப்பாக டி.எம்.எஸ். – பி.சுசீலா கூட்டணியில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள எம்.எஸ்.வி, டி.எம்.எஸ் – எஸ்.ஜானகி கூட்டணியில் குறைவான பாடல்களே கொடுத்திருந்தாலும், அத்தனை பாடல்கயும் வெற்றிப்பாடலாக மாற்றியுள்ளார்.

1974-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான உரிமைக்குரல் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், அதே ஆண்டில் எம்.ஜி.ஆருக்கு மற்றொரு வெற்றிப்படமாக அமைந்தது ‘’சிரித்து வாழ வேண்டும் படம்’’. இந்த இரு படங்களிலும் எம்.ஜி.ஆர் – லதரு நம்பியார் ஆகியோர் கூட்டணி நடித்திருந்தனர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். சிரித்து வாழ வேண்டும் படத்தில் வரும் ஒரு கனவு பாடல் தான் ‘’கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்’’ என்ற பாடல். எம்.ஜி.ஆர் படத்தில் இப்படி ஒரு மெலடி பாடலா என்று பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது இந்த படம்.

கடைசியாக 1995-ம் ஆண்டு எம்.எஸ்.விஸ்வாதன் டி.கே.ராமமூர்த்தி ஆகிய இருவரும் பல ஆண்டுகள் இடைவெளிக்கு பின் இணைந்து இசையமைத்த எங்கிருந்தோ வந்தான் படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தார் எஸ்.ஜானகி. கடந்த 2015-ம் ஆண்டு எம்.எஸ்.வி மரணமடைந்த நிலையில், அவரது தலைமாட்டில் அமந்து கதறி அழுத எஸ்.ஜானகி, எனக்கு முத்து முத்தான பாடல்களை கொடுத்தவர் அவர் என்று கூறியுள்ள அழுதுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Mgr M S Viswanathan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment