New Update
/indian-express-tamil/media/media_files/2eABCQGLnaS4DV0GR4dY.jpg)
ரஜினியுடன் இருக்கும் இந்த குழந்தைதான் இப்போது இளைஞர்களின் மனதைக் கட்டிப்போடும் பாடல்களை உருவாக்கிய இசையமைப்பாளர். அந்த இசையமைப்பாளர் யார் என்று இப்போது பார்ப்போம்.
ரஜினிகாந்தின் சமீபத்திய படங்களுக்கு அதிகமாக இசையமைத்து வருபவர் அனிருத். வியாழக்கிழமை வெளியான வேட்டையன் படத்திற்கும் இசை அனிருத் தான். மனசிலாயோ பாடல் மூலம் இளசுகளை துள்ள வைத்துள்ள அனிருத், சிறு வயதில் ரஜினிகாந்த் உடன் எடுத்தப் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க வேண்டும் என 1000 சதவீதம் விரும்பினேன் கூறினார்.
தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், மன்னன் பட சூட்டிங்கின்போது அனிருத் சிறுகுழந்தையாக செட்டுக்கு வந்தார். அப்போது சண்டி ராணியே பாடலுக்கான சூட்டிங் நடந்துக் கொண்டிருந்தது. அதற்காக சிம்மாசனம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. நான் அனிருத்தைப் பார்த்ததும், அந்த சிம்மாசனத்தில் அமர வைத்து நானே போட்டோ எடுத்தேன். அந்த சிம்மாசனத்தில் அமர்ந்த அனிருத், இன்று இசை என்னும் சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளார் என்று கூறினார்.
இதனையடுத்து ரஜினிகாந்த் உடன் அனிருத் அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.