கதையில் சந்தேகம் எழுப்பிய கண்ணதாசன்... ஸ்ரீதர் செய்த மேஜிக் : படம் வெற்றி பெற்றதா?

1962-ம் ஆண்டு வெளியான படம் நெஞ்சில் ஓர் ஆலயம். முத்துராமன், தேவிகா, கல்யாண் குமார் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.

1962-ம் ஆண்டு வெளியான படம் நெஞ்சில் ஓர் ஆலயம். முத்துராமன், தேவிகா, கல்யாண் குமார் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.

author-image
WebDesk
New Update
Kannadasan TR

கண்ணதாசன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

புதுமை இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய ஒரு படத்திற்கு பாடல் எழுதிய கவியரசர் கண்ணதாசன், இந்த கதை நமது கலாச்சாரத்திற்கு சரியாக இருக்குமா என்று யோசித்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல, அதன்பிறகு ஸ்ரீதர் கதைக்கு தேவையான ஒரு காட்சியை படமாக்கி சேர்த்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் புதுமை இயக்குனர் என்று பெயரெடுத்தவர் ஸ்ரீதர். 1954-ம் ஆண்டு வெளியான ரத்தபாசம் என்ற படத்தின் மூலம் எழுத்தாளராக தமிழ் சினிமாவில் நுழைந்த ஸ்ரீதர்முத்துராமன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில பல படங்களை இயக்கினார். அதே சமயம் அப்போது முன்னணி நடிகர்களாக இரந்த எம்.ஜி.ஆர் சிவாஜி ஆகியோரை வைத்து குறைவான படங்களே இயக்கி இருந்தார்.

அதே சமயம் ஸ்ரீதர் இயக்குனராக இருந்த காலக்கட்டத்தில் புதுமுகமாக இருந்த பலரை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அந்த வகையில்,  1962-ம் ஆண்டு வெளியான படம் நெஞ்சில் ஓர் ஆலயம். முத்துராமன், தேவிகா, கல்யாண் குமார் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்திற்கு, எம்.எஸ்.வி – ராமமூர்த்தி இசையமைக்க அனைத்து பாடல்களையும் கண்ணதாசனே எழுதியிருந்தார்.

இதில் ‘’என்ன நினைத்து என்ற பாடலும், சொன்னது நீதானா என்ற பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கதைப்படி, கல்யாண் குமார் தேவிகா இருவரும் காதலித்து வருவார்கள். படிப்புக்காக கல்யாணம் குமார் வெளிநாடு சென்றுவிட, தேவியாவின் வீட்டில் அவரை முத்துராமனுக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். ஒரு கட்டத்தில் முத்துராமனுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

Advertisment
Advertisements

இந்த மருத்துவமனையில் டாக்டராக இருப்பவர் கல்யாண் குமார். ஆப்ரேஷனுக்கு பிறகு தான் உயிர் பிழைப்பேனா மாட்டேனே என்று தெரியாது என நினைக்கும் முத்துராமன் தனது மனைவி தேவிகாவை தான் இறந்த பிறகு மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்வார். அதேபோல், தனது மனைவியின் காதலன் இந்த டாக்டர் தான் என்று தெரிந்துகொள்ளும் முத்துராமன் இவரிடம் என்று தான் இறந்த பிறகு எனது மனைவியை திருமணம் செய்துகொள்ளுங்கள் என்றும் சொல்வார்.

இறுதியாக ஆப்ரேஷன் முடிந்து முத்துராமன் உயிர் பிழைத்துவிடுவார். அவர் உயிர் பிழைத்ததால், மிகுந்த மகிழ்ச்சியடையும் டாக்டர் கல்யாண் குமார், இந்த மகிழ்ச்சியுடனே மரணமடைந்துவிடுவார். 60-களில் இந்த படம் படமாக்கப்பட்டபோது, இந்தியாவில் மறுமணம் என்ற ஒன்று இல்லை. இதனால் இன்றைய கலாச்சாரத்திற்கு இந்த கதை ஒத்துவருமா என்பதை யோசித்துக்கொள் ஸ்ரீ என்று பாடல் எழுதிய கண்ணதாசன் இயக்குனர் ஸ்ரீதரை எச்சரித்துள்ளார்.

கண்ணதாசன் இவ்வாறு சொன்னதால், அதில் கண்டிப்பாக எதாவது இருக்கும். அதே சமயம் இந்த காட்சியை எடுத்துவிட்டால் இந்த படத்தை எடுப்பதே வேஸ்ட் அதனால் என்ன செய்யலாம் என்று யோசித்த ஸ்ரீதர், தேவிகா – முத்துராமன் இருவருக்கும் ஒரு தனி காட்சி வைத்துள்ளார். இந்த காட்சியில், அழுதுகொண்டிருக்கும் தேவிகாவிடம், நான் சொன்னதில் என்ன தவறு, அப்பா அம்மா இருவரும் தங்களது மகளுக்கு திருமணம் செய்து வைப்பார்கள்.

திருமணம் முடிந்து அந்த கணவன் இறந்து போனால் அந்த பெண்ணின் அப்பா அம்மாவுக்கு தனது மகள் இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைப்பார்களே! அதே மாதிரி தான் எனக்கும் தோன்றுகிறது. எனக்கு பிறகு உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று தான் நான் இதை கேட்கிறேன். நீ இப்படியே இருந்துவிட கூடாது என்பதால் தான் கேட்கிறேன் என்று அப்பா அம்மா ஸ்தானத்தில் இருந்து பேசுவது போன்ற ஒரு காட்சியை எடுத்து படததில் இணைந்துள்ளார்.

இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், ஸ்ரீதருக்கும் பாராட்டுக்களை பெற்று கொடுத்தது. கண்ணதாசன் இந்த கதை சரி வருமா என்று கேட்காமல் இருந்து ஸ்ரீதர் அப்படியே இந்த படத்தை எடுத்திருந்தால், இப்போதைய கலாச்சாரத்திற்கு இந்த படம் சரியாக இருந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான் என ஸ்ரீதரே தனது சித்ராலயா பத்திரிக்கையில் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kannadasan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: