Advertisment

பருத்தி வீரன் பட சிறுமி முத்தழகு இவரா? வைரல் புகைப்படம்

2007-ம் ஆண்டில் பெரிய வெற்றிப்படமாக அமைந்த இந்த படத்தில் ஒரு ரவுடிக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் இடையேயான காதலை கிராமத்து வாசனையுடன் திரைக்கதை அமைத்திருந்தார் இயக்குனர் அமீர்.

author-image
WebDesk
New Update
Paruthi Veeran

பருத்தி வீரன் படத்தில் கார்த்தி - பிரியாமணி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

2007-ம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிப்படமாக உருவெடுத்த பருத்தி வீரன் படத்தில் இளம் முத்தழகு கேரக்டரில் நடித்த சிறுமியின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான 3-வது படம் பருத்தி வீரன். கடந்த 2007-ம் ஆண்டு வெளியான இந்த படத்தின், மூலம் கார்த்தி தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான நிலையில், பிரியாமணி நாயகியாக நடித்திருந்தார். மேலும் பொன்வண்ணன், சரவணன், சம்பத், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

2007-ம் ஆண்டில் பெரிய வெற்றிப்படமாக அமைந்த இந்த படத்தில் ஒரு ரவுடிக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் இடையேயான காதலை கிராமத்து வாசனையுடன் திரைக்கதை அமைத்திருந்தார் இயக்குனர் அமீர். இந்த படத்தில் பருத்தி வீரனாக கார்த்தி, முத்தழகுவாக பிரியாமணி இருவரும் நடித்தார்கள் என்பதை விட வாழ்ந்தார்கள் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இருவரின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அதேபோல் இந்த படத்தில் இளம் பருத்தி வீரன் மற்றும் இளம் முத்தழகுவாக ஒரு சிறுவனும் சிறுமியும் நடித்திருந்தனர். இவர்களுக்கு அறியாத வயசு புரியாத மனசு என்ற ஒரு பாடலும் படத்தில் இடம் பெற்றிருந்தது. இந்த பாடலை இசையமைப்பாளர் இளையராஜா பாடியிருந்தார். படத்தில் இளம் முத்தழகு கேரக்டரில் நடித்தவர் பெயர் கார்த்திகா தேவி. தற்போது இளம்பெண்ணாக இருக்கும் இவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Muthalahu Young

எளிமையான மற்றும் நேர்த்தியான பாரம்பரிய உடைகள் அணிந்திருக்கிறார். கடந்த ஆண்டு ஒரு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இருந்து அவரது புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த முந்தைய பேட்டியில், கார்த்திகா தேவி பருத்தி வீரன் படத்தில் நடித்தது குறித்து அனுபவத்தைப் பற்றி பேசினார். மதுரைக்கு அருகில் உள்ள கிராமத்தில் பிறந்தவர்.

தான் நான்காம் வகுப்பு படிக்கும் போது கிராமத்தில் ஆடிஷன் எடுக்க சிலர் வந்ததாகவும், அந்த நேரத்தில், அவர் நடனமாட விரும்பி அந்த ஆடிஷனில் பங்கேற்றுள்ளார். ஆனால் அவருக்கு இளம் முத்தழகு வேடம் பெற்றார். அதன் பிறகு கார்த்திகா மூன்று மாதங்கள் படத்தில் பணியாற்றினார். படத்தின் ஒரு ஷெட்யூல் அவரது கிராமத்தில் படமாக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், அவரது தாயார் குழுவினரின் உணவை செலவை கவனித்துக்கொண்டார்.

பருத்திவீரனுக்குப் பிறகு, கார்த்திகா தேவி இன்னும் சில படங்களில் நடித்தார், ஆனால் சிறிய வெற்றியையும் சொற்ப சம்பளத்தையும் மட்டுமே பெற்றிருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment