/indian-express-tamil/media/media_files/zPVHigKkgvnLK2NudwwC.jpg)
கவியரசர் கண்ணதாசன்
வேறொரு கவிஞர் எழுதிய ஒரு பாடல் பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், அந்த பாடல் ஆசிரியர் பிரபலமாகாத நிலையில், கண்ணதாசன் அந்த பாடல்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்திருந்தார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
கடந்த 1977-ம் ஆண்டு சின்னப்ப தேவர் திரைக்கதை மற்றும் தயாரிப்பில் வெளியான படம் ஆட்டுக்கார அலமேலு. சிவக்குமார், ஸ்ரீப்ரியா இணைந்து நடித்திருந்த இந்த படத்தில் ஒரு ஆடு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தது. மேலும், ஜெய் கணேஷ், சுருளி ராஜன், அசோகன், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு சங்கர் – கணேஷ் இசையமைத்திருந்தனர். படத்திற்கு அனைத்து பாடல்களையும் மாரா எழுதியிருந்தார்.
படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக, ‘’பருத்தி எடுக்ககையிலே’’ பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் பாடலாக உள்ளது. பல்லவியில் தொடங்கி முதல் சரணம் மற்றும் 2-வது சரணம் என தொடர்ந்து சிறப்பாக எழுதிய மாரா. எஸ்டேட் முதலாளியான சிவக்குமாரை ஆட்டுக்காரியாக இருக்கும் ஸ்ரீப்ரியாவுக்கும் இடையே நடக்கும் ரொமன்டிக் பாடல். டி.எம்.சௌந்திரராஜன், பி.சுசீலா ஆகியோர் இணைந்து பாடிய இந்த பாடல், இன்றைக்கும் புதுமையான ஒரு பாடலாக இருக்கிறது.
இந்த படம் தயாராகி வந்த காலக்கட்டத்தில் கவியரசர் கண்ணதாசனுக்கு உடல் நிலை சரியில்லை. அப்போது படத்தின் தயாரிப்பாளர் மாராவை பாடல் எழுதுமாறு கூறியுள்ளார். இந்த பாடல்களை கேட்ட கவியரசர் கண்ணதாசன், என்னை மாதிரியே சிறப்பாக எழுதி இருக்கிறாய் என்று மாராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆட்டுகக்கார அலமேலு படம் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கிறது என்பது தெரியவில்லை என்றாலும், இந்த பாடல் இன்றும் பலரும் ரசிக்கும் ஒரு பாடலாக இருந்து வருகிறது.
சங்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.