Advertisment

அவமானப்படுத்திய இசை மேதை; பாட்டால் பதில் சொன்ன பட்டுக்கோட்டை

கவிஞராக வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன் மூலமாக இசையமைப்பாளர் ஜி.ராமநாதனை சந்தித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Pattukot G ramana

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் - ஜி் ராமநாதன்

க்ளாசிக் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்த ஜி.ராமநாதன், கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல் எழுத வாய்ப்பு கேட்டு வந்ததும், அவரை ஜி.ராமநாதன் அவமானபடுத்தியது தமிழ் சினிமாவில் யாரும் அறிந்திடாத ஒரு தகவல்.

Advertisment

1950-களில் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகவும், எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வந்தவர் ஜி.ராமநாதன். அடிப்படையில் இசையமைப்பாளராக ஆனபின் தான் முறையாக கர்நாடக சங்கீதம் பயின்றுள்ளார். சிவாஜி கணேசனின் தூக்கு தூக்கி, எம்.ஜி.ஆரின் சக்ரவர்த்தி திருமகள் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அந்த காலக்கட்டத்தில், கவிஞராக வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன் மூலமாக இசையமைப்பாளர் ஜி.ராமநாதனை சந்தித்துள்ளார். அப்போது ஏ.எல்.சீனிவாசன், இவர் புது கவிஞர் வாய்ப்பு தேடி வந்துள்ளார். 4 வரிகள் எழுத சொல்லி பார்த்துவிட்டு அதன்பிறகு முடிவு செய்யலாம் என்று சொல்ல, ஜி.ராமநாதனும் ஒரு சூழ்நிலையை சொல்லி பாடல் எழுத சொல்லியுள்ளார்.

அப்போது ஜி.ராமநாதன் எதிரில் இருந்த டேபிளில் தாளம்போட்டு பாட தொடங்கிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை பார்த்த ராமநாதன், ஏ.எல்.சீனிவாசனிடம் என்னங்க இவன் தாளம் போட்டு பாட தொடங்கிட்டான். இந்த மாதிரி கொலை சிந்து பாடுவனையெல்லாம் கூட்டிட்டு வந்து ஏன் என் டைமை வேஸ்ட் பண்றீங்க என்று கேட்டு அவமானப்படுத்தியுள்ளார். மேலும் இவரால் பாட்டெல்லாம் எழுத முடியாது கூட்டிட்டு போங்க என்று கூறியுள்ளார்.

அப்போது பட்டுக்கோட்டை, நாம் கவிஞர் ஆனதும் இந்த ஆணவம் பிடித்த இசையமைப்பாளருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று நினைக்கிறார். அந்த வாய்ப்பும் வருகிறது. பாசலை படத்தில் வாய்ப்பு கிடைத்த ஒரு பாடல் எழுதிய கல்யாண சுந்தரம் பெரும் புகழை பெற்றுவிடுகிறார். இந்த வாய்ப்பை அவருக்கு கொடுத்தவர் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

அதன் பிறகு பட்டுக்கோட்டை இல்லாமல் படம் இல்லை என்ற நிலை வந்தது. ஆனால் அப்போதும் ஜி.ராமநாதன் தனது படங்களில் பட்டுக்கோட்டைக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. 1956-ல் பா.நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பில் சக்ரவர்த்தி திருமகள் படம் தயாராகிறது. இந்த படத்திற்கு ஜி.ராமநாதன் இசையமைக்க, பட்டுக்கோட்டை பாடல் எழுத வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் பெரிதும் விருப்பப்படுகிறன்றனர்.

எம்.ஜி.ஆரும் பட்டுக்கோட்டை பாடலை விரும்பினாலும், ஜி.ராமநாதன், இவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் தனது பழைய கவிஞர்களை அழைத்தே வாய்ப்பு கொடுக்கிறார். ஆனால் எல்லோரும் விரும்புவதால், கடைசி ஒரு பாடலை பட்டுக்கோட்டை எழுதட்டும் என்று விட, அவரே அந்த நேரத்தில் மிகவும் பிஸியாக இருக்கிறார். அதனால் 3 நாள் கழித்து தான் அவர் வருவார் என்று சொல்கிறார்கள். இதனால் ஜி.ராமநாதன் பட்டுக்கோட்டைக்காக காத்திருக்கிறார்.

அதன்படி 3 நாட்கள் கழித்து பட்டுக்கோட்டை வர, தயாரிப்பு நிறுவத்தினர் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். என்னதான் எழுதுகிறார் பார்ப்போமே என்று ஜி.ராமநாதனும் படத்தின் சூழ்நிலையை விளக்கி சொல்கிறார். அதன்பிறகு சூழ்நிலையை யோசித்து பட்டுக்கோட்டை பாடல் எழுத முயற்சிக்கிறார். அவரால் எழுத முடியவில்லை. இதை பார்த்த ஜி.ராமநாதன் கிண்டல் செய்கிறார். அப்போது பூனை பாணைகளை உருட்ட அதை வைத்து ஒரு பாடலை எழுதுகிறார்.

அந்த பாடல் தான் ‘’உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனை குணம’’ என்ற பாடல். இந்த பாடல் அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது. குறிப்பாக ஜி.ராமநாதனே அந்த பாடலை ஆச்சரியத்துடன் பார்க்கிறார். இதன்பிறகு ஜி.ராமநாதன் தனது தவறை உணர்த்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment