/indian-express-tamil/media/media_files/2025/09/11/ar-rahman-vaali-2025-09-11-22-29-01.jpg)
தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் உலக சினிமாவே திரும்பி பார்க்கும் வகையில், 2 ஆஸ்கார் விருதுகளை வென்ற, ஏ.ஆர்.ரஹ்மான் இன்று பிரபலமான இசையமைப்பாளராக இருந்தாலும், அவரது அப்பா, இசை உதவியாளராக இருக்கும்போது ஒரு ஸ்கூட்டர் வாங்குவதற்கு கூட, யோசித்த தருணங்கள் குறித்து தனது நூலில் குறிப்பிட்டுள்ளதாக பிரபல பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
1992-ம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாரளாக அறிமுகமானவர் தான் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ் மட்டும் இல்லாமல், இந்தி, தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட இந்திய மொழிகள், ஆங்கிலம், உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளில் என பல மொழிப்படங்களுக்கு இசையமைத்துள்ள ரஹ்மான், தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முக திறமையுடன் வலம் வருகிறார். மலையாளத்தில் பல படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆர்.கே.சேகர் தான் இவரின் அப்பா.
1964-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பழசிராஜா என்ற படத்தின் மூலம் பிரபலமான ஆர்.கே.சேகர், அதனைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். 1976-ம் ஆண்டு சோட்டாணிக்கரை அம்மன் என்ற படத்திற்கு இசையமைத்த அவர், அதே வரும் தனது 43-வது வயதில் மரணமடைந்தார். இவரை பற்றி தனது நினைவு நாடாக்கள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள கவிஞர் வாலி, தன்னிடம் இசையமைப்பாளர் கீபோர்டு வாசிப்பாரளாக இருந்த சேகர் என்ற இளைஞர் தினமும் வெகுதூரம் வர வேண்டி இருப்பதால், ஸ்கூட்டர் ஒன்று, 2-வது விலைக்கு வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.
இதை கேட்ட வாலி, புது ஸ்கூட்டர் வாங்கலாமே என்று சொல்ல, அவ்வளவு வருமானம் இல்லை என்று சேகர் கூறியுள்ளார். ரொம்ப கஷ்டப்படுகிற குடும்பம் செகண்ட் ஹேண்டில் ஒரு ஸ்கூட்டர் இருந்தா சொல்லுங்கண்ணே என்று கூறியுள்ளார். இதை பற்றி வாலி விசாரிக்கும்போது ஒரு தயாரிப்பாளர் செகண்ட் ஹேண்டில் ஆஷ்டின் காரை விற்பனை செய்ய உள்ளதாக இவருக்கு தகவல் கிடைக்கிறது. இதனையடுத்து சேகரை அழைத்துக்கொண்டு வாலி அந்த தயாரிப்பாளரை பார்க்க சென்றுள்ளார்.
அப்போது, அந்த காரின் விலையை கேட்ட சேகர், இவ்வளவு விலை நமக்கு தாங்காது அண்ணே, தயவு செய்து செகண்ட் ஹேண்ட் விலைக்கு ஸ்கூட்டரே வாங்கி கொடுங்கள் அண்ணே என்று கூறியுள்ளார். வெளியில் வரும்போது அந்த காரை பார்த்து பெரு மூச்சு விட்டு வந்துள்ளார். அதன்பிறகு காலங்கள் பல கடந்து, சேகர் இறந்துவிட்ட நிலையில், அவரின் வாரிசு ஏ.ஆர்,ரஹ்மான், அப்பா பெயரை தவறாமல் காப்பாற்றியுள்ளார். அப்பா ஆஷ்டின் கார் வாங்க முடியாமல் போகலாம் ஆனால் மகன் 2 ஆஸ்கார் விருது வாங்கி அசத்தியுள்ளார்.
ஆஷ்டின் கார் வாங்க முடியாத சேகரின் மகன் இந்தியாவுக்கு 2 ஆஸ்கார் விருதுகளை வாங்கி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் என்று வாலி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.