முதல் சந்திப்பு மோதல்... கவிஞரின் நட்பை பெற வாலி செய்த வேலை : இந்த ஹிட் பாடல் உருவானது இப்படித்தான்!
தான் யாருக்கு போட்டியாக பாடல் எழுத வந்தோமே அவருடனே நெருக்கமாக நட்புடன் இருந்த கவிஞர் வாலி, சக கவிஞரான வலம்புரி சோமநாதனின் நட்பை பெற வேண்டும் என்பதற்காக ஒரு வேலை செய்துள்ளார்.
தான் யாருக்கு போட்டியாக பாடல் எழுத வந்தோமே அவருடனே நெருக்கமாக நட்புடன் இருந்த கவிஞர் வாலி, சக கவிஞரான வலம்புரி சோமநாதனின் நட்பை பெற வேண்டும் என்பதற்காக ஒரு வேலை செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வாலிப கவிஞர் என போற்றப்படும் வாலி, நட்புக்கு இலக்கணமாகவும் திகழ்ந்துள்ளார் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. அந்த வகையில் ஒருவருடன் நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவரின் பெயரை பாடலில் வைத்துள்ளார் வாலி.
Advertisment
வாலி வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் வாய்ப்பு கிடைக்காத சென்னையை விட்டு கிளம்ப முடிவு செய்தபோது, கண்ணதாசன் எழுதிய ''மயக்கமா கலக்கமா'' என்ற பாடலை கேட்டு, மனம் மாறிமீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்துகொண்டு இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் கற்பகம் படத்தில் பாடல்கள் எழுதி வாலி பிரபலமான நிலையில், எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல்கள் எழுத தொடங்கினார்.
கற்பகம் படத்திற்கு முன்னதாக வாலி, சில படங்களில் பாடல்கள் எழுதியிருந்தாலும், கற்பகம், அவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது. சினிமாவில் தான் வளர்ந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்று வாலி பல மேடைகளில் கூறியுள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதேபோல் தனது 80-வது பிறந்த நாளில், தனக்கு வாய்ப்பு அளித்த எம்.எஸ்.வி மற்றும் தனது முதல் பாடலை பாடிய பி.சுசிலா ஆகிய இருவரையும் மேடைக்கு அழைத்து காலிவில் விழுந்து வணங்கியுள்ளார்.
தான் யாருக்கு போட்டியாக பாடல் எழுத வந்தோமே அவருடனே நெருக்கமாக நட்புடன் இருந்த கவிஞர் வாலி, சக கவிஞரான வலம்புரி சோமநாதனின் நட்பை பெற வேண்டும் என்பதற்காக பாடலில் அவரது பெயர் இடம் பெறும் வகையில் ஒரு பாடலை எழுதியுள்ளார். தமிழ் சினிமாவில் எழுத்தாளர், இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட வலம்புரி சோமநாதன், கவியரசர் கண்ணதாசனுடன் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொண்டவர்.
Advertisment
Advertisements
ஆரம்பகட்டத்தில் வாலிக்கும் வலம்புரி சோமநாதனுக்கும் அவ்வளவாக ஒத்துப்போகவில்லை. ஆனாலும் இவரின் நட்பை பெற வேண்டும் என்று கவிஞர் வாலி முயற்சித்துள்ளார். அப்போது ஜெய்சங்கர் இரட்டை வேடத்தில் நடித்த பஞ்சவர்ணக்கிளி படத்தில் பாடல் எழுத ஜெய்சங்கருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக பாடல் எழுத சென்ற, வாலி அங்கு வலம்புரி சோமநாதன் இருப்பதை பார்த்துள்ளார். அதன்பிறகு அவரிடம் பாடலுக்கான சுட்சிவேஷன் சொல்லப்பட்டுள்ளது.
அதன்பிறகு பாடலை எழுதிய வாலி, கண்ணன் வருவான், கதை சொல்வான், வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான், குழல் எடுப்பான் பாட்டிசைப்பான், வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான் என்று எழுதியுள்ளார். இதில் வலம்புரி சங்கு என்று சொல்லப்படுள்ள வார்த்தை வலம்புரி சோமநாதனை குறிக்கும். இந்த பாடல் எழுதும்போது அருகில் இருந்த வலம்புரி சோமநாதன் வாலியை கட்டி அணைத்து பாராட்டியுள்ளார்.
இந்த பாடல் எழுதும்போது தொடங்கிய இவர்களின் நட்பு கடைசி வரை நீடித்துள்ளது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“