PS 2 Release: ஆழ்வார்க்கடியான் நம்பி எங்கே? புதிய வேடத்தை வெளியிட்ட ஜெயராம்

பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார் கடியன் நம்பி என்ற கேரக்டரில் நடித்துள்ளவர் நடிகர் ஜெயராம்.

பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார் கடியன் நம்பி என்ற கேரக்டரில் நடித்துள்ளவர் நடிகர் ஜெயராம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jayaram

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார் கடியன் நம்பி கேரக்டரில் நடித்துள்ள நடிகர் ஜெயராம், முதல் பாகத்தை இருந்தை விட 2-ம் பாகத்திற்காக கெட்டப் மாற்றம் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள படம் பொன்னியின் செல்வன். 2- பாகங்களாக தயாராகியுள்ள இந்த படத்தை மணிரத்னம் இயக்கியுள்ள நிலையில், விக்ரம், கார்த்தி, ஜெயம்ராவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்,ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2-ம் பாகத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்து. இதனிடையே பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் நாளை (ஏப்ரல் 28) வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் தற்போதுவரை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார் கடியன் நம்பி என்ற கேரக்டரில் நடித்துள்ளவர் நடிகர் ஜெயராம். முதல் பாகத்தில் க்ளீன் ஷேவ் செய்த தோற்றத்தில் வந்த ஜெயராம் 2-ம் பாகத்தில் நீளமான தலைமுடி தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார். இந்த புதிய தோற்றத்தில் ஜெயராமின் வீடியோவை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

Advertisment
Advertisements

இந்நிலையில், ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, தான் 'காளாமுகன்' என்பதை வெளிப்படுத்தினார். பொன்னியின் செல்வன் 2-ல் இருந்து காளாமுகனாக இந்த அழகான தோற்றத்தைப் பாருங்கள்" என்று பதிவிட்டுள்ளார். காளாமுகன் வேஷம் போல் தோன்றினாலும், முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்க வாய்ப்பு உள்ளது. பொன்னியின் செல்வன் பாகம் 1 இல் அன்பான நம்பியாக தோன்றிய ஜெயராம் 2-ம் பாகத்தில் புதிய தோற்றத்தில் வருவது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொன்னியின் செல்வன் என்பது இடைக்கால சோழப் பேரரசின் வரலாற்றுப் புனைகதை. முதல் திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள் சோழப் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன், அவனது சகோதரி குந்தவை, இளைய சகோதரனும் பட்டத்துத் தலைவருமான பொன்னியின் செல்வன், அவர்களின் தந்தையும் மன்னருமான சுந்தர சோழன், கரிகாலனின் நண்பன் இளவரசன் வந்தியத்தேவன், சோழப் பேரரசின் நிதியமைச்சரின் மனைவி நந்தினி, பூங்குழலி என்ற படகுப் பெண். , மற்றும் ஆழ்வார் கடையன் நம்பி என்ற ஒற்றர் ஆகியோர் முக்கிய கேரக்டர்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: