கோவையில் த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி... படங்கள் இங்கே!
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் விளம்பர நிகழ்வுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் படத்தின் விளம்பர நிகழ்வு நடைபெறுகிறது.
பொன்னியின் செல்வன் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்க திரைப்பட குழுவினர். கோவைக்கு வந்துள்ளனர்.
Advertisment
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்த நிலையில், 2-ம் பாகத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது. தொடர்ந்து வருகின்ற 28ஆம் தேதி இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் விளம்பர நிகழ்வுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் படத்தின் விளம்பர நிகழ்வு நடைபெறுகிறது. சரவணம்பட்டி பகுதியில் உள்ள Prozone (தனியார்) மாலில் இந்நிகழ்வு இன்று மாலை 4:30 மணி அளவில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் விமான மூலம் கோவை வந்தடைந்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, நடிகைகள் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் தற்போது வருகை புரிந்துள்ளனர்.
பி.ரஹ்மான்.கோவை மாவட்டம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.