சங்க பணத்தில் முறைகேடு: நடிகர் விஷாலுக்கு ரெட் கார்டு? தயாரிப்பாளர் சங்கம் ஆக்ஷன்!

விஷால் அடுத்து நடிக்கும் புதிய படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

விஷால் அடுத்து நடிக்கும் புதிய படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vishal 30

நடிகர் விஷால்

சங்க பணம் முறைகேடு விவகாரம் தொடர்பான நடவடிக்கை எடுத்துள்ள தயாரிப்பாளர் சங்கம், இனி விஷாலை வைத்து படம் இயக்க தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் விஷால், அவ்வப்போது தனது பேச்சு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். குறிப்பாக சமீபத்தில் வெளியான இவரின் ரத்னம் படத்தின் வெளியீட்டுக்கு முன்பு இருந்து தற்போது வரை விஷால் செய்யும் ஒவ்வொரு செயலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே நடிகர் சங்கத்தில் பொதுச்செயலாளராக இருக்கும் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது. தயாரிப்பாளர் சங்கத்தின் நிதியை பொறுப்பற்ற முறையில் கையாண்டமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த தற்போது தயாரிப்பாளர் சங்கம் தனி குழு அமைத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், விஷால தலைவராக இருந்தபோது, ரூ12 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 

இந்த இழப்பு குறித்து விஷால் பதில் அளிக்க வேண்டும் என்று, கூறப்பட்ட நிலையில், இதுவரை அவர் தரப்பில் இருந்து எந்த பதிலும் வராத காரணத்தினால், விஷால் நடிக்கும் புதிய படங்களுக்கு கட்டப்பாடுகளை விதித்து தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி விஷால் நடிப்பில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் ஆலோசனை செய்த பிறகே, பட வேலைகளை தொடங்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது,

Advertisment
Advertisements

தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த அறிக்கையின் காரணமாக விஷால் நடிக்கும் புதிய படங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ் சினிமா வட்டாரத்தில் விஷாலுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு விதித்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

இதனிடையே தயாரிப்பாளர் சங்கத்தின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள நடிகர் விஷால், தயாரிப்பாளர் சங்கத்தின் வைப்புநிதியை செயற்குழு மற்றும் நிர்வாகிகள் குழுவினரின் அனுமதி பெற்றே, சங்க உறுப்பினர்களின் மருத்துவ காப்பீடு மற்றும் பென்சன் ஆகியவற்றிக்கு பயன்படுத்தப்பட்டது. வைப்புத்தொகையை பயன்படுத்தலாம் என்று செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி சங்க நிர்வாகிகளிடம் கையெழுத்திட்ட பிறகே, நலத்திட்டங்களுக்கு செலவு செய்யப்பட்டது என கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamil Cinema Actor vishal

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: