புலன் விசாரணை படத்தில் கேப்டன் மகள்; பல சீரியல்களில் நடித்தவர், இவரது கணவர் இயக்குனர்: யார்னு கண்டுபிடிங்க!

தொடர்ந்து காணாமல்போகும் பெண்களை கண்டுபிடிக்க களமிறங்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் நடவடிக்கைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் பெரிய வெற்றிப்பமாக அமைந்தது.

தொடர்ந்து காணாமல்போகும் பெண்களை கண்டுபிடிக்க களமிறங்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் நடவடிக்கைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் பெரிய வெற்றிப்பமாக அமைந்தது.

author-image
WebDesk
New Update
Pulan visarani Movie Upat

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகைகள் பலரும் தற்போது முன்னணி நடிகைகளாக இருந்து வருகின்றனர். அந்த வகையில், விஜயகாந்துக்கு மகளாக நடித்து தற்போது நடிகர் மற்றும் இயக்குனராக இருக்கும் ஒரு நடிகரை திருமணம் செய்துகொண்ட ஒரு நடிகை இருக்கிறார். அவர் யார் தெரியுமா?

Advertisment

தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் பெரிய வெற்றிகளை குவித்தவர் தான் விஜயகாந்த். இவர் நடிப்பில் கடந்த 1990-ம் ஆண்டு வெளியான படம் புலன் விசாரணை. சீரியல் கில்லர் ஆட்டோ சங்கரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தில ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி கேரக்டரில் விஜயகாந்த் நடித்திருந்தார். அவருடன், சரத்குமார் வில்லனாக நடித்திருந்த இந்த படததில் ராதாரவி, ஆனந்த்ராஜ், ரூபினி, நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

தொடர்ந்து காணாமல்போகும் பெண்களை கண்டுபிடிக்க களமிறங்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் நடவடிக்கைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் பெரிய வெற்றிப்பமாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் தான் இயக்குனர். ஆர்.கே.செல்வமணி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் கொடுத்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, அடுத்து விஜயகாந்த் நடிப்பில் கேப்டன் பிரபாகரன் என்ற பெரிய வெற்றிப்படத்தையும் செல்வமணி இயக்கியிருந்தார்.

புலன் விசாரணை படத்தில் கேப்டன் விஜயகாந்த், ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு மகளாக நடித்த நடிகை தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் நடித்த நடிகை சோனியா தான். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், மௌனராகம், மாப்பிள்ளை, அழகன், சிஷ்யா, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்துள்ளார்.

Advertisment
Advertisements

2003-ம் ஆண்டு வெளியான பார்த்திபன் கனவு திரைப்படத்தில், விவேக் – சோனியா இருவரும் முதல் மரியாதை படத்தை ரீக்ரியேட் செய்திருப்பார்கள். அதேபோல் 2006-ம் ஆண்டு சுந்தர்.சி நடிப்பில் வெளியான தலைநகரம் படத்தில் தனது கணவர் போஸ் வெங்கட்டுக்கு மனைவியாகவே நடித்திருப்பார். இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. தமிழில் பல சீரியல்கள் வெப் தொடர்களில் நடித்துள்ள சோனியா, பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமையுடன் வலம் வருகிறார்.

Sonia Bose Venkat

உப்பு புளி காரம் என்ற வெப் தொடரில் நடித்த சோனியா, தற்போது மீனா, என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். மெட்டி ஒலி சீரியல் மூலம் அறிமுகமான இவரது கணவர் போஸ் வெங்கட், இதுவரை கன்னிமாடம், சார் என இரு படங்களை இயக்கியுள்ளார். இவரும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ள நிலையில். பல வெற்றிப்படங்களில் வில்லனுக்கு குரல் கொடுத்துள்ளார். கடைசியாக விடுதலை 2, டி.என்.ஏ ஆகிய படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: