Advertisment

லால் சலாம் கொண்டாட்டம்... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்துடன் புதிய கொடி : திருச்சி ரசிகர்களால் பரபரப்பு

நிஜத்திலும் நல்ல திறமையான கிரிக்கெட் வீரர்களான விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்துள்ள இப்படம், முழுக்க, முழுக்க கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு நகரும் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
Aishwayra FLog

திருச்சி ரசிகர்கள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம்திரைப்படம் இன்று வெளியானதை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் திருவிழா போலக் கொண்டாடி வருகின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள  இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகக்கோப்பை நாயகன் கபில் தேவ் நடிக்கின்றார்கள் என்றபோது படத்தின் மீது எதிர்பார்ப்பு கிளம்பியது.

Advertisment

நிஜத்திலும் நல்ல திறமையான கிரிக்கெட் வீரர்களான விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்துள்ள இப்படம், முழுக்க, முழுக்க கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு நகரும் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் கதையில் அதைத் தாண்டி தேவையான கருத்துக்கள் பேசி ரசிகர்களின் கைத்தட்டல்களை பரிசாகப் பெற்றுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

இந்நிலையில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை, தமிழகத்தில் சில திரையரங்குகளில் காலை 9 மணிக்கு வெளியிடபட்டது. அந்த வகையில் திருச்சி மாநகரில் 4 திரையரங்குகளில் இந்த படம் வெளியானது. திருச்சி மாரிஸ் திரையரங்கில் பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் ரஜினி ரசிகர்கள் லால் சலாம் படத்தை கொண்டாடினர். இதோடு இவர்கள் செய்திருக்கும் மற்றொரு செயலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகைப்படத்துடன் கூடிய கொடி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். 'லால் சலாம்' என்ற படத்தின் தலைப்பிற்கு ஏற்ப சிவப்பு நிறக் கொடியில் மஞ்சள் நிற வட்டத்திற்குள் ஐஸ்வர்யாவின் புகைப்படத்தை அச்சிட்டு அதைச் சுற்றி 'சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்' எனும் வாக்கியத்தை அச்சிட்டிருந்தது அனைவரையும் உற்று நோக்க வைத்தது.

இதனை தொடர்ந்து ரஜினி ரசிகர்களிடம் கேட்டபோது, தொடக்கம் முதல் க்ளைமேக்ஸ் வரை படம் வலியுறுத்தும் ஒரு மையக் கருத்து மதநல்லிணக்கம். மொய்தீன் பாயாக வரும் சூப்பர் ஸ்டார் தனது சிறப்பான நடிப்பினால் ரசிகர்களை கட்டிப் போடுகின்றார். மொய்தீன் பாய் கதாப்பாத்திரத்தை சிறப்பாகக் கையாண்டது மட்டும் இல்லாமல், தனது ரசிகர்களுக்கும் குட்டி ட்ரீட் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார்.

கிராமத்துக் கோயில் பூசாரியாக வரும் செந்தில், ஊர் தலைவர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள தம்பி ராமையா ஆகியோர் நம்மை கிராமத்திற்கே அழைத்துச் செல்கின்றனர். இருவருக்கும் கொடுக்கப்படுள்ள வசனங்கள் தியேட்டரில் கைத்தட்டலை அள்ளுகின்றன. விஷ்ணு விஷாலின் காதலியாக வரும் அனந்திகா சனில்குமார் தான் வரும் சில காட்சிகளிலேயே மனம் கவர்கின்றார்.

விவேக் பிரன்னா, தங்கதுரை ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாப்பாத்திரத்திற்கு பொருந்திப் போகின்றனர். படம் முழுக்க வரும் விஷ்ணு விஷாலின் நடிப்பு நிறைவைத் தருகின்றது என்றனர். மேலும் படத்தின் இசை, ஒளிப்பதிவு காட்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படம் மாபெரும் வெற்றியை பெரும் என ரசிகர்கள் தெரிவித்தனர்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aishwarya rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment