எந்திரன் Vs 2.O... 2-ம் பாகத்தின் கதை கவனம் ஈர்க்காத காரணம் இதுதான்: பிரபலம் சொன்ன தகவல்!

2015-ம் ஆண்டு 2.0 என்ற பெயரில் எந்திரன் படத்தின் 2-ம் பாகம் வெளியானது. முதல் பாகத்தில் ஹீரோ வில்லன் என இரு கேரக்டரில் நடித்திருந்த ரஜினிகாந்த் இந்த படத்திலும் அதே கேரக்டரில் நடித்திருந்தார்.

2015-ம் ஆண்டு 2.0 என்ற பெயரில் எந்திரன் படத்தின் 2-ம் பாகம் வெளியானது. முதல் பாகத்தில் ஹீரோ வில்லன் என இரு கேரக்டரில் நடித்திருந்த ரஜினிகாந்த் இந்த படத்திலும் அதே கேரக்டரில் நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Enthiran Movie 2

எந்திரன் - 2.0

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ஷங்கர் இயக்கத்தில் வெளியாக எந்திரன் படம் பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், அந்த படத்தின் 2-ம் பாகமாக வெளியான 2.0 திரைப்படத்தை கதையுடன் ஒன்றி பார்க்க முடியாததற்கு காரணம் என்ன என்பது குறித்து, எழுத்தாளர் ஜெ.தீபா கூறியுள்ளார்.

Advertisment

ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் எந்திரன். ரோபோவுக்கு காதல் வந்தால் என்ன நடக்கும்? என்பதை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடித்திருந்த இந்த படத்தில், ரஜினிகாந்த் வசீகரன், சிட்டி ரோபோ என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். சந்தானம், கருணாஸ் ஆகியோருடன், டெல்லி கொச்சின் ஹனிபா, கலாபவன் மணி ஆகியோர் சிறிய கேரக்டரில் நடித்திருந்தனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. உலகம் முழுவதும் எந்திரன் திரைப்படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது. இந்த படத்திற்கு எழுத்தாளர் சுஜாதா திரைக்கதை வசனம் எழுதியிருந்தார். படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து 5 வருடங்களுக்கு பிறகு கடந்த 2015-ம் ஆண்டு எந்திரன் 2.0 என்ற பெயரில் இந்த படத்தின் 2-ம் பாகம் வெளியானது. முதல் பாகத்தில் ஹீரோ வில்லன் என இரு கேரக்டரில் நடித்திருந்த ரஜினிகாந்த் இந்த படத்திலும் அதே கேரக்டரில் நடித்திருந்தார்.

பாலிவுட் நடிகர் அக்ஷை குமார் இந்த படத்தில் பக்ஷிராஜன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். படத்திற்கு ஹீரோ ரஜினிகாந்த் வில்லன் அக்ஷைகுமார் என்று இருந்தாலும், உண்மையில் இந்த கதையில் ஹீரோ அக்ஷை குமார் தான். இந்த படத்தில் ஹீரோ தான் வில்லன், வில்லன் தான் ஹீரோ என்று பிரபல எழுத்தாளர் ஜே.தீபா கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

இது குறித்து அவர் கூறுகையில், எந்திரன் படம் ஒரு ரோபோ ஒரு பெண்ணை வந்து காதலிக்கிறது. அதனால் ஏற்படுற இழப்பு. அதுதான் இந்த படத்தின் ஒட்டுமொத்த லைன். வேற எதுவும் இல்லை. ஆனால் அதில் எவ்வளவு விஷயங்கள் அவர் சுவாரசியப்படுத்தி இருக்கிறார். ஒரு சின்ன லைன். ஒரு ரோபோ ஒரு பெண்ணை காதலிக்கிறது என்றால் ஏன் காதலிக்கும்? எப்படி காதலிக்கும்? எதுக்கு காதலிக்கும்? படத்தில் ஐஸ்வர்யா ராயை ஒரு குளோரிபை எல்லாம் பண்ணிருக்க மாட்டாங்க. அவங்க ஒரு பொண்ணு அவ்வளவுதான்.

ஆனால் ஒரு ரோபோ வில்லனா மாறும்போது என்னெல்லாம் பண்ணும். வசீகரன் அவருடைய ஆல்டர் ஈகோதான் சிட்டி ரோபோ. அப்போ அந்த இரண்டு கேரக்டர் ஒரே கேரக்டர். அவருடைய ஆல்டர் ஈகோ எப்படி இருக்கும் என்பதை காட்டுவதற்கு, என்னென்ன சுவாரசியங்கள் படத்தில் வைத்திருக்கிறார் என்பதை பார்க்க முடியும். இரண்டாவதுதான் எந்திரன் 2 வந்தது. அந்த படத்திற்கு சுஜாதா அவர்கள் இல்லன்னு நினைக்கிறேன். அந்த படத்துக்கும் இந்த படத்துக்குமான வித்தியாசம் என்னவா இருக்கும்?

எந்திரனின் இரண்டாவது படம் பார்க்கும்போது அதில் ஹீரோதான் வில்லன். வில்லன் தான் ஹீரோ. அதில் வில்லன் யாருன்னா ரஜினி தான் வில்லன். அதில் அக்ஷை குமார் தான் ஹீரோ. பறவைக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன் என்பவருடைய ஆவி திரும்பி வந்துருச்சு. அப்படின்னா பறவையை காப்பாத்ததான அவர் போறாரு. அவர் தானே நமக்கு ஹீரோவா இருக்க முடியும். அதனால் தான் அந்த கதையில பேஸே இல்லாமல் போனது. நம்மால் படத்துடன் ஒட்ட முடியவில்லை என்று கூறியுள்ளார். 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: