/indian-express-tamil/media/media_files/2025/08/23/tr-simbu-2025-08-23-11-48-02.jpg)
தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் கலாச்சாரம் பெருகி வரும் நிலையில், 80-90களில் வெற்றி பெற்ற பல படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் டி.ஆர், முதன் முதலில் கதையின் நாயகனாக நடித்த உயிருள்ளவரை உஷா திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கு காரணம் என்ன என்பதையும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி கலைஞர்களில் முக்கியமானவர் டி.ராஜேந்தர். இயக்குனர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட இவர், 1980-ம் ஆண்டு வெளியான ஒரு தலை ராகம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்திற்கு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி கல்லூரி மாணவர் கேரக்டரில் கேமியோவாக நடித்திருப்பார்.
இந்த படத்தை தொடர்ந்து, வசந்த அழைப்புகள், நெஞ்சில் ஒரு ராகம், ராகம் தேடும் பல்லவி உள்ளிட்ட படங்களை இயக்கி சிறிய கேரக்டரில் நடித்து வந்த டி.ராஜேந்தர், 1983-ம் ஆண்டு தாய் தயாரித்து இயக்கி நடித்த உயிருள்ளவரை உஷா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். இந்த படத்தில் அவர் நடித்த செயின் ஜெயபால் கேரக்டர் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது. உயிருள்ளவரை உஷா திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் தான் நடிகை நளினி தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.
சரிதா, கங்கா, ராதா ரவி, வெந்நிறஆடை மூர்த்தி, கவுண்டமணி, எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, டி.ராஜேந்தரே இசையமைத்திருந்தார். படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் கதையை எழுதிய டி.ராஜேந்தர், படத்தில் வரும் செயின் ஜெயபால் கேரக்டரில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த்திடம் கேட்க, அவர் அந்த கதையில் நடிக்க விருப்பம் தெரிவிக்காத நிலையில், தானே இந்த படத்தில் அந்த செயின் ஜெயபால் கேரக்டரில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியான நிலையில், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் பெரிய வெற்றியை பெற்றது. 80-களில் வெளியான இந்த படம் பெற்ற வெற்றியை தொடர்ந்து, 42 வருடங்களுக்கு பிற3க இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக நடிகரும், இயக்குனருமான டி.ஆர் அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், சிம்பு பிறப்பதற்கு முன்பே நான் எடுத்த படம் தான் உயிருள்ளவரை உஷா. 1982 செப்டம்பர் 16ந்தேதி நான் என் மனைவியை திருமணம் செய்தேன். 1983 மார்ச் மாதம் 4ந்தேதி இந்த படத்தை ரிலிஸ் பண்ணேன். மனைவி அமையும் எல்லாம் இறைவன் கொடுத்த வரம். ஒவ்வொரு ஆன்மகனுக்கும் அவரது கல்யாணத்திற்கு பிறகு ஒரு பெரிய துக்கு துக்கும். சிலருக்கு தூக்கிட்டு, சிலருக்கு துரதிஷ்டவசமாக முடிந்துவிடும் ஆனால் இறைவனுடைய அருளால் என் மனைவியை நான் திருமணம் பண்ண பிறகு, அந்த படம் எனக்கு ஒரு பெரிய சூப்பர் ஹிட் கொடுத்து.
நான் இவ்வளவு பெரிய இத்தனை படங்களை சொந்த தயாரிப்பிலே இவ்வளவு படங்களை எடுக்க முடிந்தது எனறல் அதற்கு உறுதுனையாக இருந்துன்னா என் மனைவிதான். அவரே தயாரிப்பாரளாக உடனிருந்து கை கொடுத்தாங்க. அதற்கு பிறகுதான் சிம்பு பிறந்தார். அவர் தான் அப்பா முதல் ரிலீஸ் உயிருள்ளவரை உஷா படத்தை பண்ணுங்க என்று சொன்னார். அதனால் உயிருள்ளவரை உஷா படத்தை ரிலீஸ் பண்ண ஐடியா கொடுத்தே சிம்பு என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.