ரஜினிகாந்த் நடிப்பில், டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் தயராகியுள்ள வேட்டையன் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (செப்டம்பர் 20) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
Advertisment
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ரஜினிகாந்த் தொடர்ந்து அதிரடி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறார், கடைசியாக அவர் நடிப்பில் வெளியான லால் சலாம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், அதற்கு முன்பு வெளியான ஜெயிலர் படம் பெரிய வசூல் வேட்டை நடத்தியது. சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த ஜெயிலர் படத்தின் 2-ம் பாகம் விரைவில் தொடங்க உள்ளது,
இதனிடையே லால் சலாம் படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜெய்பீம் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த படத்தில், அமிதாப் பச்சன், ராணா, பகத் பாசில், மஞ்சு வாரியார், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் மனசிலாயோ பாடல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.
இதனிடையே வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று (செப்டம்பர் 20) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ள நிலையில், ரஜினிகாந்த் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது,
Advertisment
Advertisements
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், காக்கா கழுகு கதை சொல்லி, சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினிகாந்த் இந்த முறை எந்த மாதிரியான குட்டி ஸ்டோரியை சொல்வார், அவரின் பேச்சு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எந்த அளவிற்கு உயர்த்த போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வேட்டையன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஆக்ரோஷமான எண்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக வரும் ரஜினிகாந்த் மாஸ் லுக்கில் அசத்தினாலும், இதற்கு முன்பு வெளியான தர்பார் படத்தில் பார்த்த ரஜினிகாந்தை ஞாபகப்படுத்துகிறது இந்த டிரெயிலர். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் காவல்துறை உயர் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் குரல் கொடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“