/indian-express-tamil/media/media_files/2024/11/27/w3hJyFMrgTxHO7IABxik.jpg)
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிக்க உள்ள சூர்யா 45 படத்தின் பட பூஜை இன்று கோவையில் நடைபெற்ற நிலையில், நாளை முதல் படப்பிடிப்பு நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா நடிப்பில் 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கங்குவா திரைப்படம் வெளியானது. சூர்யா நடிப்பில் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் நவம்பர் 14-ந் தேதி வெளியாகி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வசூலில் பெரும் சறுக்கலை சந்தித்தது. ஆனாலும் சூர்யா தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்.
தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44-வது படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்து தனது 45-வது படமாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ள நிலையில், த்ரிஷா இந்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2013-ம் ஆண்டு வெளியான தீயா வேலை செய்யனும் குமாரு என்ற படத்தின் மூலம் நடிகாராக அறிமுகமான ஆர்.ஜே.பாலாஜி, 2019-ம் ஆண்டு வெளியாக எல்.கே.ஜி படத்தின் மூலம் கதாசிரியராக மாறினார். அதன்பிறகு மூக்குத்தி அம்மன் என்ற பெரிய வெற்றிப்படத்தை இயக்கி நடித்த ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனாகவும் நடிகராகவும் பெரிய அங்கீகாரத்தை பெற்றிருந்தார். தான் இயக்கிய படங்களில் நானே ஹீரோவாக நடித்திருந்த ஆர்.ஜே.பாலாஜி முதல்முறையாக மற்றொரு நடிகரை தனது கதையில் நடிக்க வைத்து இயக்க உள்ளார்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான சூர்யா 45 படத்தன் போஸ்டரில், அருவா அதிகமாக இருக்க நடுவில் குதிரை ஒன்று இருப்பது போலவும், வேல்கம்பும் படத்தில் உள்ளதால், இது வரலாற்று படமாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே தற்போது சூர்யா 45 படத்தன் பட பூஜை கோவை மாசானி அம்மன் கோவிலில் நடந்துள்ளது. இன்று சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.