Advertisment

மஞ்சு வாரியர் குறித்து பிரபு தேவா ட்வீட்..! ஜி.வி.பிரகாஷ் பட அப்டேட்.. மேலும் செய்திகள்

அடுத்த ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படம் தயாராகியுள்ளது.

author-image
WebDesk
New Update
மஞ்சு வாரியர் குறித்து பிரபு தேவா ட்வீட்..! ஜி.வி.பிரகாஷ் பட அப்டேட்.. மேலும் செய்திகள்

நடிகர் பிரபுதேவை நடனப் புயல் என திரையுலகில் அழைக்கப்பட்டு வருகிறார். ரப்பர் போன்ற இவர் உடலை வில்லாக வளைத்து ஆடும் ஆட்டத்தைக் காண தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

Advertisment

வில்லு, ராதே ஆகிய படங்களையும் இவர் இயக்கியுள்ளார். பொன் மாணிக்கவேல், தேள் ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

நடிகை மஞ்சு வாரியர் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தேர்வு செய்யும் கதைகள் அனைத்து அங்கு ஹிட் படமாக அமைந்து வருகின்றன.

இந்நிலையில், மஞ்சு வாரியரின் படத்தில் பிரபு தேவை நடன இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் மஞ்சுவாரியருக்கு நடனம் கற்றுத்தருவது குறித்து ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், மஞ்சுவாரியரின் பாடலுக்கு நடனம் அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பிரபுதேவா பகிர்ந்துள்ளார்.

20 ஆண்டு கனவு நிறைவேறியது: மகிழ்ச்சியில் பிரபல ஒளிப்பதிவாளர்

யுவன் சங்கர் ராஜா இசையில் கேன்டி என்ற ஆல்பம் பாடல் யூ-டியூப் தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்தப் பாடலை அறிவு எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா தயாரித்து நடிக்கவும் செய்து இசையும் அமைத்துள்ளார்.

இந்தி பாடகி தவனி பனுஷாலி இந்தப் பாடலை பாடியதுடன் நடனமும் ஆடியுள்ளார்.

இந்தப் பாடலை அமித் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். வின்னைத் தாண்டி வருவாயா, நடுநிசி நாய்கள் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த மனோஜ் பரமஹம்சா இந்தப் பாடலுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோரால் பார்க்கப்பட்டு ரசிக்கப்பட்டுவரும் இந்தப் பாடலை தனது டிவிட்டரில் பகிர்ந்த அவர், 20 ஆண்டு கால கனவு நிறைவேறியது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'செல்பி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் செல்பி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் பேச்சிலர், ஜெயில் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகின.

இந்த நிலையில் இயக்குநர் வெற்றி மாறனின் உதவி இயக்குநர்களில் ஒருவரான மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள படம் 'செல்பி'.

இந்தப் படத்தில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

பிகில் திரைப்படத்தில் நடித்திருந்த வர்ஷா பொல்லம்மா இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தன்னுடைய 'வி கிரியேசன்ஸ்' மூலம் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் செல்பி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி செல்பி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் பிரசாந்த் பட அப்டேட்

இந்தியில் வெளியான 'அந்தாதுன்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் 'அந்தகன்' என்ற பெயரில் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த திரைப்படத்தை இயக்குனர் தியாகராஜன் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகை பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சிம்ரன், சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

படத்தின் போஸ்டர் ஒன்றை பகிர்ந்த அவர் அதில் 'பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் உலகளவில் வெளியாகும் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் அந்தகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சல்மான் படத்தின் 3ஆவது பாகம் வெளியாகும் தேதி அறிவிப்பு

இந்தி திரையுலகில் முன்னணி நடிகரான சல்மான் கான் நடித்துள்ள படம் டைகர். இந்தப் படத்தின் 2 பாகங்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், 3ஆவது பாகம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் மற்றொரு பிரபல நடிகரான இம்ரான் ஹாஷ்மியும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியானது. அந்த வீடியோவில் சண்டைப் பயிற்சியில் கத்ரீனா கைஃப் ஈடுபடுகிறார்.

சல்மான் கான் தூங்கிக் கொண்டிருக்கிறார். சண்டை பயிற்சி முடிந்த பிறகு இப்போது நீங்கள் தான் என்று கத்ரீனா கைஃப் சல்மான் கானை எழுப்புகிறார்.

வடிவேலுவுக்கு பதில் யோகி பாபு: ஜரூராக கிளம்பிய ‘இம்சை அரசன்’ இயக்குனர்

அப்போது சல்மான் கான் டைகர் எப்போதும் ரெடி தான் என்று கூறுகிறார்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படம் தயாராகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment