Advertisment

சின்மயி மட்டுமல்ல... நானும் பாதிக்கப்பட்டேன்... வைரமுத்து மீது மேலும் ஒரு பாடகி புகார்

தன்னிடம் இணக்கமாக நடந்துகொண்டால் என்னை சினிமாவில் பெரிய இடத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் நான் அதற்கு உடன்பட மறுத்துவிட்டேன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vairamuthu

கவிஞர் வைரமுத்து மீது மேலும் ஒரு பாலியல் புகார்

கவிஞர் வைரமுத்து மீது ஏற்கனவே பின்னணி பாடகி சின்மயி பாலியல் புகார் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது மற்றொரு பின்னணி பாடகியும் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியரான கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல பின்னணி பாடகி சின்மயி புகார் அளித்திருந்தார். இந்த விவாகரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சின்மயியை தொடர்ந்து நடிகைகள் பலரும் சினிமாவில் தங்களுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக பலர் மீது மீ டூ-வில் புகார் அளித்தனர்.  

இந்த மீடு புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்த சின்மயிக்கு சினிமாவில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், தனக்கு சினிமா வாய்ப்பு குறைந்ததற்கு காரணம் வைரமுத்துதான் என்று கூறி வருகிறார். ஆனாலும் வைரமுத்து மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வரும் சின்மயி பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகிறார்.

மேலும் இதுவரை வைரமுத்து மீது 17 பெண்கள் பாலியல் புகார் கொடுத்திருந்தாலும் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சின்மயி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனால் வைரமுத்து சின்மயி இடையேயான பாலியல் புகார் விவாகரம் மீண்டும் விஸ்வரூம் எடுத்துள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு பின்னணி பாடகி வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் தமிழக அரசு சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதற்கு வலைதளங்களில் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது பின்னணி பாடகி புவனா சேஷன் என்பவர் அரசின் அறிவிபுக்கு எதிர்ப்பு தெரிவித்தோடு வைரமுத்து தனக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், நான் சினிமாவில் அறிமுகமான புதிதில் வைரமுத்துவை சந்தித்தபோது திரையுலகில் தனக்கு செல்வாக்கு இருப்பதாக என்னிடம் கூறினார். தன்னிடம் இணக்கமாக நடந்துகொண்டால் என்னை சினிமாவில் பெரிய இடத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் நான் அதற்கு உடன்பட மறுத்துவிட்டேன். 1998-ல் இந்த சம்பவம் நடந்தது. அப்போது சமூகவலைதளங்கள் இல்லாததால் இதை பற்றி பேச முடியவில்லை.

ஆனாலும் அவருக்கு எதிராக நடந்துகொண்டதால் மிகப்பெரிய பாடகியாக வேண்டும் என்ற எனது கனவு கலைந்து போனது என்று வருத்தத்துடன் கூறியுள்ள அவர், அந்த காலக்கட்டத்திலர் செல்போன் வசதியும் இல்லாததால் இந்த புகார்கள் குறித்து தன்னிடம் எதற்கும் ஆதாரங்கள் இல்லை என்று கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamil Cinema Kavignar Vairamuthu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment