Advertisment

கூவத்தூரில் பிரபல நடிகை சப்ளை என அபாண்டம்: அரசியல் பிரமுகர் மீது பாடகி சின்மயி கோபம்

ரூ25 லட்சம் கொடுத்து அழைத்துவரப்பட்டவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்று அவரது பெயரையும் தனது பேட்டியில் கூறியுள்ளார் ஏ.வி.ராஜூ.

author-image
WebDesk
New Update
Chinmayi123

பாடகி சின்மயி

கூவத்தூரில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருந்தபோது அங்கு பிரபல நடிகை அழைத்துவரப்பட்டதாகவும், அவரை ஒரு நடிகர் தான் அழைத்து வந்ததாகவும், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ அளித்த பேட்டி வைரலாக பரவிய நிலையில், அவருக்கு பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

அ.தி.மு.க ஆட்சியில் சென்னை கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது, பல நடிகைகள் அங்கு வந்தார்கள். இதை பிரபல நடிகர் ஒருவர் தான் ஏற்பாடு செய்தார். இதில் ஒரு எம்.எல்.ஏ கேட்ட நடிகைக்கு ரூ25 லட்சம் கொடுத்து அழைத்து வந்தார்கள். யார் யாருக்கு நடிகைகள் வேண்டும் என்று கேட்டுவிட்டு, அவரவர் கேட்ட நடிகைகள் அங்கு வரவைழைக்கப்பட்டார்கள்.

ரூ25 லட்சம் கொடுத்து அழைத்துவரப்பட்டவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்று அவரது பெயரையும் தனது பேட்டியில் கூறியுள்ளார் ஏ.வி.ராஜூ. இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாடகி சின்மயி தனது பங்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்த நடிகைக்கு ஆதரவாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாடகி சின்மயி, ஒரு மோசமான ஆண் அரசியல்வாதி ஒரு நடிகை குறித்து மோசமாக பேசியிருக்கிறார். இவர்கள் அனைவரையும் ஜெ.ஜே. மேடம் தனது காலில் போட்டு மிதித்தது நல்லது. அவர்களை பற்றி மேடத்திற்கு நன்றாக தெரிந்துள்ளது. அரசியல் கட்சியின் தொடர்பில் இருப்பதால் தான் பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் குழந்தைகளை வன்கொடுமை செய்பவர்கள் சுதந்திரமாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

தவறு செய்பவர்களின் பெயரை பெண்கள் சொன்னால் அந்த பெண்னை அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் சீண்டுகிறார்கள். பாடகர் கார்த்திக்கு ஜக்கி வாசுதேவுடன் தொடர்பு உள்ளது. சிவராத்திர கொண்டாட்டத்தின்போது அவரை மூளைசலவை செய்துவிட்டார். ஜக்கி மற்றும் வைரமுத்து போன்றோருக்கு முதல்வர் ஆதரவு இருக்கிறது. அதே நேரத்தில் வைரமுத்து முதல்வரால் மேடையில் ஏறினார். கிட்டத்தட்ட அனைவருமே சமூக நீதி மற்றும் பெண்ணியம் பற்றிய உரைகளை நிகழ்த்தினார்.

இதுதான் தமிழகம் கொண்டாடும் பலாத்கார கலாச்சாரத்தின் உண்மை முகம். இங்குள்ள அரசியல்வாதிகள் பெண்களைப் பற்றி மிகவும் கொடூரமான, பாலியல்,துஷ்பிரயோகமான முறையில் பேசுகிறார்கள். ஆளுங்கட்சிக்குள் ஒருவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். தமிழ் தெரிந்தால் வாந்தி எடுப்பீர்கள். இன்று அ.தி.மு.க.வுடன் தொடர்புள்ள மற்றொரு அரசியல்வாதி, தனது சொந்த பலாத்கார-கற்பனை மனநிலையை வெளிப்படுத்தி, அவர்களின் அழுகிய அரசியல் விளையாட்டுகளுடன் தொடர்பில்லாத ஒருவரை குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த அரசியல் கட்சிகள் தங்கள் கொடூரமான பலாத்கார-கலாச்சார சுற்றுச்சூழலில் மற்றவரால் மகிழ்ச்சியுடன் பாதுகாக்கப்படும் அடுத்த பெண் துஷ்பிரயோகம் அல்லது கற்பழிப்புக்காக காத்திருக்கும் ஹைனாக்களிடம் மாட்டிக்கொண்டு துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. எப்படியும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் நான் தினமும் பிரார்த்தனை செய்கிறேன், இது ஒரு நிலையான பிரார்த்தனை - அவமானம், துஷ்பிரயோகம், ஒடுக்குமுறை, மனிதாபிமானம், துன்புறுத்தல், மானபங்கம், பலாத்காரம், பாலியல் குற்றவாளிகளை ஆதரிக்கும் மனிதர்கள் ஒவ்வொரு நாளும் மிகவும் கொடூரமான முறையில் இருக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment