கமல்ஹாசனுக்கு முதல் பாட்டு பாடுற, மிஸ் ஆச்சுனா அவ்ளோதான்; எச்சரித்த பிரபலங்களை பாராட்ட வைத்த பாடகர்!

முதன் முதலில் கமல்ஹாசன் படத்தில் பாடல் பாடும்போது தான் சந்தித்த அனுபவங்கள் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

முதன் முதலில் கமல்ஹாசன் படத்தில் பாடல் பாடும்போது தான் சந்தித்த அனுபவங்கள் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
maliasamj

தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட பாடகர்களில் முக்கியமானவர் தான் மலேசிய வாசுதேவன். நடிகர், இயக்குனர், இசை அமைப்பாளர் என பன்முக திறமையுடன் வலம் வந்த இவர், முதன் முதலில் கமல்ஹாசன் படத்தில் பாடல் பாடும்போது தான் சந்தித்த அனுபவங்கள் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisment

தனது சினிமா வாழ்க்கையில் ஆரம்பகட்டத்தில், சிறு படங்களில் பாடல்கள் பாடி வந்த மலேசியா வாசுதேவனுக்கு பெரிய வாய்ப்பாக அமைந்தது கமல்ஹாசன், ரஜினிகாந்த் கூட்டணியில், பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படம் தான். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் கண்ணதாசன் எழுதிய 2 பாடல்களை மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி மற்றும் பி.சுசீலாவுடன் இணைந்து பாடியிருந்தார்.

இந்த படத்தில் இடம் பெற்ற ‘செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா’ என்ற பாடல் பெரிய வரவேற்பினை பெற்றிருந்தது. இந்த பாடல் பதிவான விதம் குறித்து பேசியுள்ள மலேசியா வாசுதேவன், இந்த படத்தின் பூஜைக்காக நான் சென்றிருந்தேன். பாரதிராஜா, என்னை கண்டிப்பாக வரவேண்டும் என்று கூறியிருந்தார். அதனால் நான் சென்றிருந்தேன். பூஜை அன்றே ஒரு பாடலை பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில், ஒரு பாடலை பதிவு செய்ய ஏற்பாடுகள் ஆனபோது அந்த பாடலை பாட வேண்டிய எஸ்.பி.பி கொஞ்சம் லேட்டாக வந்தார்,

அதே சமயம் அவரால் பாட முடியாத நிலையும் இருந்தது. தொண்டை கட்டிக்கொண்டதால் அவரால் பாட முடியவில்லை. பாரதிராஜா அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அங்கும் இங்கு சென்றுகொண்டிருக்கிறார். இதை பார்த்த இளையராஜா, ஒன்னும் பிரச்னை இல்லை. வாசு (மலேசியா வாசுதேவன்) வந்துக்கான்ல, அவனை வைத்து பாட வைப்போம், நன்றாக இருந்தால் பார்ப்போம். இல்லை என்றால், ட்ராக் வைத்துக்கொண்டு, எஸ்.பி.பி சரியானவுடன், அவரை பாட வைப்போம் என்று இளையராஜா சொன்னார்.

Advertisment
Advertisements

அதன்படி நான் அந்த பாடலை பாட தயாரானேன். அங்கு இருந்தவர்கள் எல்லோரும், முதன் முதலில் கமல்ஹாசனுக்கு பாட போற, இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாத சரியா பாடிடு இல்லனா போச்சு என்று சொன்னார்கள். உனக்கு பயமாகிவிட்டது. அந்த பாடலை என்னுடன் சேர்ந்து, பி.சுசீலா பாடினார். அவரை பார்த்தாலும் ஒரு பக்கம் பயம் இருந்தது. ஆனாலும் மனதில் தைரியத்தை வைத்துக்கொண்டு பாடி முடித்தேன். அனைவரும் சூப்பர் என்று கைதட்டடினார்கள் என்று தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

Tamil Cinema Update Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: