/indian-express-tamil/media/media_files/2025/06/07/Y6NfN5jm039Dv9ZAZICd.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து தற்போது அரசியல் தலைவராக உயர்ந்துள்ள தளபதி விஜய், அடுத்து தேர்தலை சந்திக்க உள்ளார், அவரின் அப்பா ஒரு இயக்குனர் என்பது பலரும் அறிந்த தகவல் என்றாலும், விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் ஒரு புகழ்பெற்ற பாடகி என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 1992-ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய். அதனைத் தொடர்ந்து செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்துடன் இணைந்து நடித்த விஜய், அடுத்து பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, பிரியமானவளே, நினைத்தேன் வந்தாய் என காதல் படங்களாக நடித்து தனக்கான பெண் ரசிகர்களை உருவாக்கினார்.
ஒரு கட்டத்தில் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்த விஜய், திருமலை, கில்லி, திருப்பாச்சி, போக்கிரி, துப்பாக்கி என தொடர் ஆக்ஷன் வெற்றிப்படங்களை கொடுத்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான கோட் திரைப்படமும் ஆக்ஷன் படமாக அமைந்தது. தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். கடந்த சனிக்கிழமை அவர் தனது முதல் அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார்.
சினிமாவில் நடிகராக மட்டும் இல்லாமல் பாடகராகவும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள விஜய், தனது அம்மாவுடன் இணைந்து பாடலை பாடியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல் தான். 1994-ம் ஆண்டு வெளியான தனது ரசிகன் படத்தின் மூலம் பாடகராகவும் அறிமுகமான விஜய், தேவா, கோட், விஜயகாந்த் நடித்த பெரியண்ணா, ஆகிய படங்களில் விஜய் தலா 3 பாடல்களை பாடியுள்ளார். அதேபோல் தனது படங்களில், தனது அம்மா ஷோபா சந்திரசேகருடன் இணைந்து 3 பாடல்களை விஜய் பாடியுள்ளார்.
1995-ம் ஆண்டு வெளியான விஷ்ணு படத்தில் ‘தொட்டபெட்டா ரோட்டுமேல முட்ட பரோட்டா’ என்ற பாடலை விஜயுடன் இணைந்து பாடியவர் அவரது அம்மா ஷோபா சந்திரசேகர். அதேபோல் 1997-ம் ஆண்டு வெளியான ஒன்ஸ்மோர் என்ற படத்தில் இடம் பெற்ற ‘ஊர்மிளா ஊர்மிளா’ என்ற பாடலை இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இந்த இரு பாடல்களுமே இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்’பை பெற்று வருகிறது. 1994-ம் ஆண்டு வெளியான ரசிகன் படத்தில், லவ் மாமா, சிவகாசி, வேட்டைக்காரன், சுறா உள்ளிட்ட விஜய் படத்திற்காக ஷோபா சந்திரசேகர் பாடியுள்ளார்.
1967-ம் ஆண்டு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இருமலர்கள் படத்தில் பாடகியாக தனது பயணத்தை தொடங்கிய ஷோபா சந்திரசேகர் இது குறித்து ஒரு பேட்டியில் கூறுகையில், இரு மலர்கள் படத்தில் குழந்தைக்கு பாடல் பாட வேண்டும் என்று அழைக்க உடனே என் அப்பா அழைத்து சென்றார். அந்த பாடல் எனது க்ளாசிக்கல் குரு மகாராஜாவின் பெயரிலேயே அந்த பாடல் அமைந்துள்ளது, அவரது மகளிடமே நான் பாடல் கற்றுக்கொள்வேன் என்பது தெரியாது.
இந்த பாடல் எதிர்பாராதவிதமாக எனக்கு பிடித்தமாக முறையில் நடந்தது. இந்த பாடல் பாடும்போது எனக்கு 10 வயது. இந்த பாடல் ஹிட்டனவுடன், அடுத்து குழந்தைகள் பாடல் என்றால் என்னையும் சுந்தர் சுரேந்தரையும் கூப்பிடும் நிலை வந்தது. பல குழந்தை பாடல்கள் பாடி இருக்கிறோம், ஷாந்தி நிலையம்ஈ, வரவு எட்டனா செலவு பத்தனா, தாமரை நெஞ்சம் உள்ளிட்ட பல பாடல்களை பாடி இருப்பதாக கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.