New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/05/Shweta-Mohan.jpg)
பின்னணி பாடகி சுவேதா மோகன்
பின்னணி பாடகி சுஜாதா மோகனின் மகளாக சுவேதா மோகன் தற்போது இளைஞர்களின் பேவரெட் குரலாக மாறியுள்ளார்.
பின்னணி பாடகி சுவேதா மோகன்
தென்னிந்திய மொழிகளில் பின்னணி பாடகியாக இருக்கும் சுவேதா மோகன் நடிகைகளுக்கெ டஃப் கொடுக்கும் வகையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனது மென்மையாக குரல் மூலம் தென்னிந்திய ரசிகர்களை கட்டிப்போட்ட பெருமைக்கு சொந்தக்காரர் பின்னணி பாடகி சுவேதா மோகன். 1995-ம் ஆண்டு வெளியான இந்திரா படத்தின் மூலம் தமிழில் பாடகியாக அறிமுகமான இவர், மலையாளம் கன்னடம், இந்தி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார்.
பின்னணி பாடகி சுஜாதா மோகனின் மகளாக சுவேதா மோகன் தற்போது இளைஞர்களின் பேவரெட் குரலாக மாறியுள்ளார். இதுவரை 700 மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ள சுவேதா மோகன், விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். மேலும் இசைஞானி இளையரலாஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், எம்.எம்.கீரவாணி, வுன், ஜி.வி. தேவி ஸ்ரீ பிரசாத், அனிருத் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார்.
இவரது குரலில் வெளியான பல பாடல்கள் ரசிகர்கள் மனதை கவர்ந்த நிலையில், சமீபத்தில் வெளியான வாத்தி படத்தில் இடம்பெற்ற ரு தலை காதல தந்த பாடல் இப்போது பல இளைஞர்களின் ரிங்டோனாக மாறியுள்ளது. சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சுவேதா மோகன், அவ்வப்போது டிசைனர் உடைகளை அணிந்து தனக்கென்று ஒரு டிரெண்டிங்கையும் உருவாக்கி வைத்திருக்கிறார்.
இந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்தக்களை கூறி வரும் நிலையில், தற்போது சுவேதா மோகன் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் சிகப்பு நிற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவிற்கு அடுத்த ஹீரோயின் ரெடி என்று கூறி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.