தமிழ் சினிமாவில் எதார்த்தமாக எழுதிய சில பாடல்கள், ஒரு சிலரின் நிஜ வாழ்க்கையில் பொருந்திப்போகும் அளவுக்கு பெரிய வெற்றியை பெற்றிருக்கும். அந்த வகையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் வாழ்க்கைக்கு பொருந்திப்போகும் ஒரு பாடல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
Advertisment
தமிழ் சினிமாவில் தனது இனிமையான குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியன். 1966-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான எஸ்.பி.பி 1969-ம் ஆண்டு தமிழில் ஹோட்டல் ரம்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இந்த படம் கைவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழில், சாந்தி நிலையம் என்ற படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் இளையகன்னி என்ற பாடல் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார். இந்த பாடல் எஸ்.பி.பி.க்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்தடுத்து படங்களில் ஹிட் பாடல்களை பாடியிருந்தார். இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை கொடுத்துள்ளார்.
அந்த வகையில் எஸ்.பி.பி வாழக்கைக்கு பொருந்திப்போகக்கூடிய ஒரு பாடல் இருக்கிறது. அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது கூட இந்த பாடல் தான் அதிகம் பகிரப்பட்டது. அப்படி ஒரு பாடல்தான் உதயகீதம் படத்தில் இடம்பெற்ற சங்கீத மேகம் என்ற பாடல். இசையமைப்பாளர் இளையராஜாவின் 300-வது படம் என்ற அடையாளத்துடன் வெளியான இந்த படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இன்றைக்கும் இந்த பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Advertisment
Advertisements
பகல், இரவு, நண்பர்களுடன் பயணம் என எப்போது வேண்டுமானாலும் கேட்க அருமையாக இருக்கும் இந்த பாடலை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம். சிந்து பைரவி ராகத்தில் அமைந்த இந்த பாடலில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சிறப்பாக பாடி அசத்தியிருப்பார். அவரது குரலில் பல பாடல்கள் வந்திருந்தாலும், இந்த பாடல் ஒரு தனிச்சிறப்பாக அமைந்திருந்தது. குறிப்பாக இந்த பாடலில் வரும் போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே என்ற வரிகள், தத்துவம் என்றாலும் இந்த பாடலில் சரியாக பொருந்திருக்கும். அதேபோல் அந்த வரிகள் எஸ்.பி.பி. வாழ்க்கைக்கும் பொருத்தமாக இருக்கிறது.
அதேபோல், இந்த தேகம் மறந்தாலும் இசையாய் மலர்வேன் என்று எஸ்.பி.பி. பாடியது, எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அனையா விளக்கே என்ற வரிகள் தற்போது அவர் இல்லாவிட்டாலும், அவரது நினைவாக நமக்கு அவரது குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அவர் உடல்நிலை சரியில்லாத காலக்கட்டத்தில் இருந்தபோது கூட இந்த வரிகள் தான் பலராலும் அதிகமாக பகிரப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“