/indian-express-tamil/media/media_files/2025/06/04/Iv98tPoxFJ5GBGgtzkSo.jpg)
சிவாஜி கணேசன் நடிப்பில் பெரிய வெற்றிப்படமாக அமைந்த ஒரு திரைப்படத்தில் நான் தான் முதலில் நடிக்க வேண்டியது, ஆனால், கால்ஷீட் அதிகம் கேட்டதால், என்னால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை என்று பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்ற அடைமொழியுடன் தனது வித்தியாசமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருப்பவர் சிவாஜி கணேசன். எந்த கேரக்டராக இருந்தாலும் அதில் தனது தனித்துவத்தை அமைத்து அந்த கேரக்டராகவே மாறி நடிக்கும் திறன் கொண்ட சிவாஜி கணேசனின் நடிப்பை இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் பலரும் பின்பற்றி வருகின்றனர்.
அதேபோல் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வருவது இயக்குனர்களை மதிப்பது என சிவாஜி கணேசன் குறித்து பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். பிளாக் அன்ட் வொயிட் சினிமா தொடங்கிய டிஜிட்டல் சினிமா வரை பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள சிவாஜி கணேசன் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் புதுமுக நடிகராகவே தன்னை காட்டிகொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்.
அந்த வகையில் சிவாஜி முதன் முதலில் பாரதிராஜா இயக்கத்தில் நடித்த திரைப்படம் முதல் மரியாதை. வேறு மொழி திரைப்படத்தின் கதையை தழுவி பசும்பொன் என்ற டைட்டிலில் ஒரு படத்தை எடுக்க முடிவு செய்த பாரதிராஜா சிவாஜி கணேசனிடம் டேட் வாங்கி வைத்துள்ளார். ஆனால் கதை விவாதத்தின்போது அவர்கள் எதிர்பார்த்த திரைக்கதை அமையவில்லை. இதனால் அந்த படம் கைவிடப்பட்டது.
அதன்பிறகு, கதாசிரியர் ஆர்.செல்வராஜ் சொன்ன, பஞ்சம் பிழைக்க வந்த ஒரு பெண்ணுக்கு அந்த ஊர் பெரிய மனிதர் மீது காதல் என்ற ஒன்லைன் தான் பின்னாளில் முதல் மரியாதை படமானது. இந்த படம் பாரதிராஜா சிவாஜி கணேசன் இருவருக்குமே தங்களது திரை வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது. இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நான் தான் என்று பாடகரும் நடிகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.
முதல் மரியாதை படத்தில் சிவாஜிக்கு பதிலாக நான் தான் முதலில் நடிக்க வேண்டியது. அவரை மாதிரி என்னால் நடிக்க முடியாது. ஆனாலும் என்னால் முடிந்த அளவுக்கு நல்ல பண்ணியிருப்பேன். ஆனால் பாரதிராஜா 45 நாட்கள் தொடர்ந்து கால்ஷீட் கேட்டார். அப்போது நான் ஒரு நாளைக்கு 4-5 பாடல்கள் பாடி வந்தேன். அதனால், 3 காலக்கட்டமாக கால்ஷீட்டை பிரிந்து கொடுப்பதாக சொன்னேன். ஆனால் அது முடியவில்லை. கடைசியில் அது நல்லதாக முடிந்தது. ஐ மிஸ் ராதா என்று எஸ்.பி.பி கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.