Advertisment

வறுமையில் வாடிய டி.எம்.எஸ்... வாழ்க்கையை கணித்த பி.யூ.சின்னப்பா : கணிப்பு நடந்ததா?

23 வயதில் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையான டி.எம்.எஸ், குடும்ப வறுமை காரணமாக ராயல் டாக்கீஸ் என்ற நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
மூச்சு விடாமல் முதலில் பாடியவர் டி.எம்.எஸ்... எத்தனை பேருக்கு இது தெரியும்?

பாடகர் டி.எம்.சௌந்திரராஜன்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணியில் இருப்பவர்களும், ஏற்கனவே முன்னணியில் இருந்தவர்களும், தங்களது ஆரம்ப காலக்கட்டத்தில் பலவகையான தடைகளை தகர்த்து இந்த நிலைக்கு வந்திருப்பார்கள். அந்த வகையில் பாடகர் டி.எம்.சௌந்திரராஜன் தனது இளமை காலத்தில் வறுமையில் வாடியதோடு, குடும்பத்தை நடத்தவே சிரமத்தை சந்தித்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் தனது குரல் வளத்தின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் டி.எம்.சௌந்திரராஜன். எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முதல் பலருக்கும் தனது தனித்திறமையின் மூலம் திரையில் அவர்கள் பாடுவது போலவே பாடி அசத்திய இவர்எந்த நடிகருக்காக பாடினாலும் திரையில், அந்த நடிகரே பாடும் அளவுக்கு அவர்களின் குரல் போன்ற தோற்த்தில் பாடும் திறன் பெற்றவர்.

அதேபோல் பாடல்களில் தனது தனித்திறமையின் மூலம் ஒருசில மாற்றங்களை செய்து அதில் வெற்றியும் கண்ட டி.எம்.சௌந்திரராஜன், தனது இளம் வயதில் பல இன்னல்களை சந்தித்துள்ளார். 23 வயதில் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையான டி.எம்.எஸ், குடும்ப வறுமை காரணமாக பி.யூ.சின்னப்பா நடிப்பில் சுதர்சன் என்ற படத்தை தயாரித்துக்கொண்டிருந்த ராயல் டாக்கீஸ் என்ற நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

அந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு வீடு காலியாக இருந்த நிலையில், அந்த வீட்டிலேயே தங்கி வேலை பார்த்த டி.எம்.எஸ். அங்கு வரும் இசையமைப்பாளர்களுக்கு வேண்டிய தேவைகளை செய்துகொடுத்து வந்துள்ளார். அப்போது ஒருநாள், பி.யூ.சின்னப்பா, கே.ஆர்.ராமசாமி, டி.எஸ்.பாலையா, இசையமைப்பாளர் சுப்பையா நாயுடு ஆகியோர் அந்த வீட்டின் மாடியில் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது டி.எம்.எஸ். கீழே ஒரு பாடலை பாடிக்கொண்டிருந்துள்ளார். இதை கேட்ட மாடியில் இருந்த ஒருவர் இவனுக்கு என்னாச்சு, பைத்தியம் மாதிரி கத்திக்கொண்டு இருக்கிறான் என்று கேட்டுள்ளார். இதை கேட்ட பி.யூ சின்னப்பா அவன் கத்திக்கொண்டிருக்கவில்லை. அவன் பாடுவது நான் பாடிய பாட்டு. இன்னும் சொல்லப்போனால் என்னை விட சிறப்பாக பாடுகிறான். இப்படியே சாதகம் செய்தால், பெரிய பாடகனாக வருவான் என்று கூறியுள்ளார்.

பியூ சின்னப்பா சொன்ன நேரம், 1950-ம் ஆண்டு கருணாநிதி கதை வசனத்தில் எம்.ஜி.ஆர் நாயகனாக நடித்த மந்திர குமாரி என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான டி.எம்.எஸ்., அதன்பிறகு தனது கானக்குரலால் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment