வாக்கு மீறிய ஸ்டண்ட் இயக்குனர்... வாட்ச் வைத்து தெளிவுபடுத்திய சிவாஜி : என்ன நடந்தது தெரியுமா?

சிவாஜி கணேசன் தனது நடிப்பின் கடைசி காலக்கட்டங்களில் வந்த ஒன்ஸ்மோர், பூப்பரிக்க வருகிறோம் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை திறனை வெளிப்படுத்தியிருப்பார்.

சிவாஜி கணேசன் தனது நடிப்பின் கடைசி காலக்கட்டங்களில் வந்த ஒன்ஸ்மோர், பூப்பரிக்க வருகிறோம் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை திறனை வெளிப்படுத்தியிருப்பார்.

author-image
WebDesk
New Update
Sivaji Ganesan Parasakthi

சிவாஜி கணேசன்

தமிழ் சினிமாவில் தனது நடிப்பில் மூலம் உச்சம் தொட்ட நடிகர் சிவாஜி கணேசன். நடிப்பு பல்கலைகழகம் என்று அழைக்கப்படும் இவர், எந்த கேரக்டராக இருந்தாலும், அந்த கேரக்டராகவே வாழ்ந்து அதற்கு உயிர்கொடுக்கும் நடிகர் என்று பல படங்களில் நிரூபித்துள்ளார். நடிப்புக்கு சிவாஜி என்று சொன்னாலும், காமெடியிலும் தனது திறமையை நிரூபித்துள்ளவர் தான் சிவாஜி.

Advertisment

தான் நடிக்கும் படங்களில் கூட நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து பல படங்களை கொடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக அவரது நடிப்பின் கடைசி காலக்கட்டங்களில் வந்த ஒன்ஸ்மோர், பூப்பரிக்க வருகிறோம் உள்ளிட்ட பல படங்களில் சிவாஜி கணேசன் தனது நகைச்சுவை திறனை வெளிப்படுத்தியிருப்பார். குறிப்பாக முதல் மரியாதை படத்தில் நடிப்புக்கும் நகைச்சுவைக்கும் பெரிய வித்தியாசத்தை காட்டியிருப்பார்.

இப்படி நடிகர் திகலம் என்று பெயர் எடுத்திருந்தாலும், நகைச்சுவை உணர்வுடன் பல படங்களை கொடுத்துள்ள சிவாஜி கணேசன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நகைச்சுவை உணவுடன் நடந்துகொண்ட ஒரு சம்பவம் இருக்கிறது. வில்லன் நடிகராக பெப்சி விஜயன் பலரும் அறிந்த ஒரு நடிகர். ஆரம்பத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த இவர், ஒருமுறை சிவாஜி நடிக்கும் படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார்.

அப்போது ஒருநாள் படப்பிடிப்பில், சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது, காலையில் படப்பிடிப்புக்கு வந்த சிவாஜி கணேசன், எப்போது இந்த காட்சி முடியும், என்னை எப்போது விடுவாய் என்று கேட்க, மாலை 4 மணிக்கெல்லாம் படப்பிடிப்பு முடிந்துவிடும் நீங்கள் சென்றுவிடலாம் என்று கூறியுள்ளார். அதன்பிறகு படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு பணியில் தீவிரமாக இருந்த பெப்சி விஜயன் தான் சொன்னதையே மறந்துவிட்டார்.

Advertisment
Advertisements

அதே சமயம் நேரத்தை பார்த்துக்கொண்டிருந்த சிவாஜி, 4 மணியை கடந்த பின், படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரின் வாட்சையும் வாங்கியுள்ளார். இங்கிருக்கும் எல்லோர் வாட்சிலும் மணி 4 ஆகிவிட்டது. உன் வாட்சியில் மட்டும் இன்றும் 4 மணி ஆகவில்லையா என்று சிவாஜி கேட்க, அப்போது தான் சொன்னதை உணர்ந்த பெப்சி விஜயன், உடனடியாக சிவாஜிக்கு எடுக்க வேண்டிய க்ளோசப் காட்சிகளை எடுத்து முடித்துவிட்டு அவரை அனுப்பி வைத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sivaji Ganesan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: