Advertisment

நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்துடன் சந்திப்பு : உருக்கமாக பதிவிட்ட சிவகார்த்திகேயன்

பிரின்ஸ் படத்துக்கு சமூகவலைதளங்களிலும் யூடியூப்போன்ற காணொளிகளிலும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை விரும்பாத கண்ணுக்குத்தெரியாத எதிரிகளால் பலத்த எதிர்ப்பு வந்தது.

author-image
WebDesk
New Update
நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்துடன் சந்திப்பு : உருக்கமாக பதிவிட்ட சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாரை சந்தித்தது தொடர்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

சினிமாவில் தன்னைப்போலவே எந்தவித பின்ணணியும் இல்லாமல் உச்சத்தை தொட்டதால் ரஜினிக்கு அஜித் மீது தனி அக்கறை உண்டு. தலைவருக்கு அடுத்து தல என்று ரசிகர்களும் அவரை ஆதரித்தனர் அதேபோல இந்த காலகட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான இருந்து ஷாருக்கானைபோல மிகவும் போராடி முன்ணணி நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்திருப்பதை ரஜினியும் அஜித்தும் தங்களைப்போன்ற ஒருவன் வெற்றி பெற்றிருப்பதை தங்களுடைய வெற்றியாகவே பார்க்கின்றனர்

இந்நிலையில் சமீபத்தில் பிரின்ஸ் படத்துக்கு சமூகவலைதளங்களிலும் யூடியூப்போன்ற காணொளிகளிலும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை விரும்பாத கண்ணுக்குத்தெரியாத எதிரிகளால் பலத்த எதிர்ப்பு வந்தது. இதனால் எப்போதும் மிக சாதாரணமாக கடந்துபோகும் சிவகார்த்திகேயன் நான்கு புறமும் வந்த எதிர்ப்பால் இதை எப்படி எதிர்கொள்வது என்கிற சிந்தனையில் இருந்தபோது ஒரு நண்பரின் குடும்ப நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக அஜித் வந்திருக்கிறார்.

அப்போது அஜித் நேராக சிவகார்த்திகேயனை தோள்மீது கைபோட்டு இதுபோன்ற நேரங்களில் மனம் தளர வேண்டாம் சிவா நீங்க பெரிய உயரத்துக்கு வந்துவிட்டதையே இது காட்டுகிறது. இப்போதுதான் உங்களுக்கு யார் நல்லவங்க யார் எதிராளி என்கிற அனுபவம் வரும். இதை பாசிட்டிவ்வா எடுத்துக்கோங்க கவலைபடவேண்டாம் என்று ஆறுதல் கூறியதால் சிவகார்த்திகேயன் மனதளவில் உற்சாகமும் அஜித் சார் நம் மீது இவ்வளவு அக்கறையுடன் இருக்கின்றாரே என்று நெகிழ்ந்து போனாராம்.

இந்த நிகழ்வு அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில, அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இந்த சந்திப்பு தொடர்பாக இணையத்தில் பதிவுகளை வெளியிட்டு தஙகளது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனிடையே தற்போது அஜிததை சந்தித்து தொடர்பான புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சிவகார்த்திகேயன், அஜித் சாரை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்தேன். அவருடன் மீண்டும் ஒரு சந்திப்பு வாழ்நாள் முழுவதும் நேசிப்பதற்காக. நேர்மறையாக கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Ajith Siva Karthikeyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment