எம்.ஜி.ஆர் தொடங்கி இன்றைய முன்னணி நடிகர்கள் வரை பலருக்கும் தனது குரலால் ஹிட் பாடல்களை கொடுத்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், ஒரு பாடலில், பாடகி கே.எஸ்.சித்ராவை சிரிக்க வைக்க படாதபாடுபட்டதாக நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.
Advertisment
தெலுங்கு படங்களில் பாடிக்கொண்டிருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியன், 1969-ம் ஆண்டு வெளியான எம்ஜி.ஆர்-ரின் அடிமைப்பெண் படத்தில் இடம்பெற்ற ஆயிரம் நிலவே வா என்ற பாடல் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படம் எம்.ஜி.ஆர்-ரின் திரை வாழ்க்கையில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் கே.வி.மகாதேவன் இசையில் பாடல்கள் அனைத்தும் வெற்றிப்பெற்றது.
அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் முன்னணி நடிகர்கள் பலருக்கும் தனது குரல் மூலம் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள எஸ்.பி.பி பல ஆண்டுகளாக ரஜினி படத்தில் ஓப்பனிங் பாடலை பாடியிருந்தார். அதேபோல் இளையராஜா தொடங்கி ஏ.ஆர்.ரஹ்மான் வரை பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும், பி.சுசீலா தொடங்கி கே.எஸ்.சித்ரா வரை பல முன்னணி பாடகிகளுடன் இணைந்து பாடல் பாடியுள்ளார்.
அந்த வகையில், ஒரு பாடல் பாடும்போது, கேஎஸ்.சித்ராவை சிரிக்க வைக்க, எஸ்.பி.பி படாதபாடுபட்டுள்ளார். இயக்குனர் அனந்து இயக்கத்தில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான படம் சிகரம். எஸ்.பி.பாலசுப்பிரமணியன் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் ரேகா, ராதா ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். படத்திற்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியனே இசையும் அமைத்திருந்தார், படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது,
Advertisment
Advertisements
இந்த படத்தில் இடம்பெற்ற ‘இதோ இதோ என் பல்லவி’ என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியன் – கே.எஸ்.சித்ரா இருவரும் இணைந்து பாடியிருந்தனர். இந்த பாடலை பாடும்போது, சரணத்தில் உன் பாடல் ஆகிறேன் என்ற வரிகளை பாடும்போது சிரிக்க வேண்டும். ஆனால் கே.எஸ்.சித்ரா சிரிக்காமல் அந்த வரிகளை பாடியுள்ளார். இதனால் எஸ்.பி.பி திருத்தம் சொல்ல, பல டேக்கள் வாங்கியுள்ளார். இறுதியாக இந்த பாடலை, கடுமையான போராட்டத்திற்கு பிறகு, கே.எஸ்.சித்ரா பாடி முடித்துள்ளார்.
சும்மா இருக்கும்போது எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பார் கே.எஸ்.சித்ரா, அவர் கடைசி வரை இப்படியே இருக்க வேண்டும். ஆனால் அந்த பாடலில் சிரிக்க சொன்னால் அவருக்கு வரவில்லை. அந்த சிரிப்பை கொண்டுவர படாதபாடுபட்டோம் என்று எஸ்.பி.பி ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.