Advertisment

கம்பேக் கொடுத்திருக்கிறாரா சுந்தர்.சி? அரண்மனை 4 எப்படி இருக்கிறது?

சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணதா, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள அரண்மனை 4 படம் எப்படி இருக்கிறது?

author-image
WebDesk
New Update
Aranmanai 4 Update

அரண்மனை 4 படம்

இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற அரண்மனை படங்களின் வரிசையில் 4-வது பாகம் இன்று (மே 3) வெளியாகியுள்ளது. இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததா? மக்கள் சொல்வது என்ன என்பதை பார்ப்போம்.

Advertisment

சுந்தர்.சி இயக்கத்தில் குழந்தைகள் முதல் பல தரப்பினர் மத்தியிலும் வரவேற்பை பெற்று வந்த அரண்மனை படம் இதுவரை 3 சீசன்கள் வெளியாகி வெற்றி பெற்றிருந்த நிலையில், 4-வது படம் அரண்மனை 4 இன்று வெளியாகியுள்ளது. சுந்தர்.சி தமன்னா, ராஷிகண்ணா, சந்தோஷ் பிரதாப், யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.

காதல் திருமணம் செய்தகொண்ட தனது தங்கை திடீரென தற்கொலை செய்துகொண்ட தகவல் கிடைத்து அது குறித்து விசாரிக்க வரும் அவரது அண்ணன் வழக்கறிஞர் எப்படி உண்மையை வெளிக்கொண்டு வருகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை. இதில் தங்கையாக தமன்னாவும், அவரது அண்ணனாக சுந்தர்.சியும் நடித்துள்ளனர். பிதாமகன் படத்தில் சூர்யாவுடன் ஒரு பாடலுக்கு நடமாடிய சிம்ரன், அதன்பிறகு இந்த படத்தில் என்டரி கொடுத்துள்ளார்.

இந்த படத்தில் சிம்ரன் வருவார் என்று எதிர்பார்க்காத ரசிகர்களுக்கு இது ஒரு சர்ப்ரைசாகவே அமைந்துள்ளது. அரண்மனை முதல் பாகத்தில் சந்தானம், 2-வது பாகத்தில் சூரி, 3-வது பாகத்தில் யோகி பாபு, விவேக், 4-வது பாகத்தில் யோகி பாபு, வி.டி.வி.கணேஷ் காமெடி செய்துள்ளனர். ஆனாலும் இந்த 4 படங்களிலும் கோவை சரளா இருந்தும், காமெடி சிரிக்கும் வகையில் இல்லை என்பது தான் சோகம்.

அரண்மனையின் முந்தைய படங்களில் நாயகிகள் கவர்ச்சி உடையில் ஒரு பாடலுக்கு நடமாடும் பாடல் காட்சி இடம்பெற்றிருக்கும். இந்த படத்தில் தமன்னா ராஷு கண்ணா இருந்தும், தமன்னா இந்த படத்தில் அவரது முதல் படமான கல்லூரி படத்தில் வந்ததுபோல் எமோஷ்னல் காட்சியில் தான் அதிகம் கவர்ந்துள்ளார் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. அரண்மனை படத்தின் முதல் பாகம் ரஜினியின் ஆயிரம் ஜென்மங்கள் படம் என்று சொன்னாலும் அந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.

அடுத்து வந்த 2-வது மற்றும் 3-வது அரண்மனை படங்கள் ஓரளவு வெற்றியை பெற்றிருந்த நிலையில், இந்த 4-வது பாகம் சுந்தர்.சிக்கு வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆக்ஷன் காட்சகள் சுந்தர்.சிக்கு பொருத்தமாக உள்ள அதே நிலையில், 2-ம் பாதி போர் அடிக்காமல் செல்கிறது என்று ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sundar C
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment