திருவிளையாடல் முருகன், இந்த நடிகை இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? கண்டிப்பா ஸ்ரீதேவி இல்ல!

1965-ம் ஆண்டு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான படம் திருவிளையாடல். சிவாஜி கணேசன், சாவித்ரி, கே.பி.சுந்தராம்பாள், டி.என்.பாலையா, முத்துராமன், தேவிகா, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார்.

1965-ம் ஆண்டு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான படம் திருவிளையாடல். சிவாஜி கணேசன், சாவித்ரி, கே.பி.சுந்தராம்பாள், டி.என்.பாலையா, முத்துராமன், தேவிகா, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Thiruvilaih

தமிழ் சினிமாவில், புராண மற்றும் பக்தி படங்கள் அதிகம் வெளிவந்த காலக்கட்டங்களில் பல குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி, பலரின் கவனத்தை ஈர்த்தார்கள். குறிப்பாக பக்தி படங்களில் கடவுள் வேஷம், போடும் குழந்தைகளை கடவுளாகவே பார்க்கும் வழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. அந்த வகையில் திருவிளையாடல் படத்தில் முருகன் வேடத்தில் நடித்த குழந்தையை பார்த்து முருகனே வந்துவிட்டார் என்று நடிகை கே.பி.சுந்தராம்பாள் அந்த குழந்தையின் காலில் விழுந்துள்ளார்.

Advertisment

1965-ம் ஆண்டு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான படம் திருவிளையாடல். சிவாஜி கணேசன், சாவித்ரி, கே.பி.சுந்தராம்பாள், டி.என்.பாலையா, முத்துராமன், தேவிகா, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். திருவிளையாடல் புராணத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தில் குழந்தை முருகன் கேரக்டரில் நடித்தவர் நடிகை சுசரிதா.

Baby Star Muruhan

வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், அன்று நான் வேஷம் போட்டுக்கொண்டு நடந்து வரும்போது அங்கு இருந்த அனைவருமே, முருகா, முருகா என்று கோஷம் போட தொடங்கிவிட்டார்கள். உண்மையாகவே அது நான் இல்லை. அந்த முருகன் தான் அன்று என் மேல் வந்தார் என்று நான் நம்புகிறேன். உள்ளே செட்டுக்குள் போனவுடன், கே.பி.சுந்தாராம்பாள் அம்மா முருகா, முருகா என்று சொல்லிக்கொண்டே என் காலில் விழுந்துவிட்டார். அப்போது அவர் முருகனே வந்துவிட்டார் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.

Advertisment
Advertisements

அதன்பிறகு செட்டுக்குள் சென்று படப்பிடிப்பு தொடங்கியது. நான் அவரை பார்த்து ஓ அவ்வையா என்று கேட்டவுடன், அவர் பாடல் பாட தொடங்குவார். அந்த செட்டுக்குள் போனவுடன் எதோ கைலாசத்திற்குள் போனது போன்ற ஒரு உணர்வை கொடுத்தது. படப்பிடிப்பில் உண்மையான மயிலை பயன்படுத்தினார்கள். ஆனால் நான் மயில்மேல் உட்காரவில்லை. ஸ்டூலுக்கு அடியில் மயிலை வைத்து, அந்த ஸ்டூலின்மேல் தான் நான் உட்கார்ந்தேன் என்று தனது நடிப்பு அனுபவத்தை கூறியுள்ளார்.

1965-ம் ஆண்டு வெளியான திருவிளையாடல் திரைப்படம் 2025-ம் ஆண்டு தனது 60 வருடத்தை நிறைவு செய்துள்ளது. இந்த படத்தில் நடித்த பல முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இப்போது உயிருடன் இல்லாத நிலையில், முருகன் வேடத்தில் நடித்த நடிகை, தனது நினைவலைகளை பகிர்ந்துகொண்டுள்ளார். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: