நடிகர்களின் குரலுக்கு ஏற்றபடி தனது குரலை மாற்றி பாடல் பாடி அவர்களுக்கு பெரிய வெற்றியை கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரரான டி.எம்.சௌந்திரராஜன், ஒரு பாடலில், பி.சுசிலாவுக்கு வெறும் ஹம்மிங் குரல் மட்டும் கொடுத்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
தமிழ் சினிமாவில் வெண்கல குரலுக்கு சொந்தக்காரர் என்று சொன்னால் அவர் டி.எம்.சௌந்திரராஜன் தான். சிவாஜிக்கு, அவர் மாதிரியும், எம்.ஜி.ஆருக்கு அவர் மாதிரியும் பாடல்கள் பாடி அசத்தியுள்ள இவர், தமிழ் சினிமாவில் 70-க்கு மேற்பட்ட நடிகர்களுக்கு தனது குரலின் மூலம் அவர்கள் பாடுவது போன்றே பாடி அவர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
அதேபோல் கண்ணதாசன் எழுதிய பல பாடல்களுக்கு தனது குரலின் மூலம் உயிர் கொடுத்துள்ள, டி.எம்.சௌந்திரரஜன்,எம்.எஸ்.வி இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.பாடகரான இசை உலகில் முன்னணியில் இருந்த டி.எம்.எஸ்., அந்த காலக்கட்டத்தில் பி.சுசிலா பாடிய ஒரு பாடலுக்கு வெறும் ஹம்மிங் மட்டும் கொடுத்துள்ளார். எம்.ஜி.ஆர் – சரோஜா தேவி இணைந்து நடித்த நாடோடி என்ற படத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சிவாஜி நடிப்பில் பல படங்களை இயக்கிய தயாரித்த பி.ஆர்.பந்தலு எம்.ஜி.ஆருடன் இணைந்த முதல் படம் ஆயிரத்தில் ஒருவன். 1965-ம் ஆண்டு வெளியான இந்த படம் எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக மாறியது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து எம்.ஜி.ஆர், பி.ஆர்.பந்தலு இணைந்த 2-வது படம் நாடோடி. 1966-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில், எம்.ஜி.ஆர் சரோஜா தேவி, நம்பியார், நகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
Advertisment
Advertisements
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த படத்திற்கு வாலி, கண்ணதாசன் இருவரும் இணைந்து பாடல்கள் எழுதியிருந்தனர். டி.எம்.சௌந்திரராஜன், பி.சுசிலா ஆகிய இருவரும் பாடல்கள் பாடியிருந்த நிலையில், எல்.ஆர்.ஈஸ்வரி ஒரு பாடல் மட்டும் பாடியிருந்தார். இந்த படத்தில் வரும் ‘’கண்களினால் பார்ப்பதினால்’’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. டி.எம்.சௌந்திரராஜன், பி.சுசிலா இந்த பாடலை பாடியிருந்தனர்.
இந்த பாடலை பி.சுசிலாவுடன் இணைந்து டி.எம்.சௌந்திரராஜன் பாடினார் என்று சொல்வதற்கு பதிலாக அவருக்கு கருவேப்பிலை போல் உதவி செய்தார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த பாடல் முழுவதும் பி.சுசிலாவின் குரலிலேயே ஒளிக்கும் நடுவில் ஓரிரு வார்த்தைகளுடன் ஹம்மிங் கொடுத்த மட்டும் தான் டி.எம்.சௌந்திரராஜன். 60 காலக்கட்டங்களில் பிஸியான பாடகராக வலம் வந்த டி.எம்.சௌந்திரராஜன், பி.சுசிலாவின் பாடலுக்கு ஹம்மிங் கொடுத்தது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இந்த பாடல் படத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news