Tamil Cinema News: தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில், வாரத்திற்கு 3 முதல் 5 படங்கள் வெளியாகி வருகிறது. இந்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுகின்றதா என்பது கேள்விக்குறிதான். ஆனாலும் படங்கள் வெளியாவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இதில் வித்தியாசமான படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு எப்போதுமே இருக்கும்.
முந்திய காலங்களில் தமிழ்ப் படங்கள் பொதுவாக உளவியல் நாடக வகையின் கீழ் வரும். அந்த கதைகள், மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் காலப்போக்கில் மக்களின் ரசனை மாற்றம் கண்டதை தொடர்ந்து, கோலிவுட்டில், வழக்கத்திற்கு மாறான கருப்பொருள்களை ஆராய்ந்து அல்லது புதுமையான நுட்பங்களைப் பயன்படுத்திய திரைப்படங்கள் வெளியாக தொடங்கின.
அந்த வகையில், அருவி முதல் 'ஆயிரத்தில் ஒருவன்' வரை தமிழ் சினிமாவில் வித்தியாசமாக எடுக்கப்பட்ட சில திரைப்படங்கள்.
சூப்பர் டீலக்ஸ்
தியாகராஜன் குமாரராஜா இயக்கிய இந்த திரைப்படம் 2019 இல் வெளியானது. விஜய் சேதுபதி, சமந்தா, ஃபகத் பாசில், ரம்யா கிருஷ்ணன் மற்றும் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நேரியல் அல்லாத கதை அமைப்பு மற்றும் வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரங்களுடன் வித்தியாசமாக கதையை சொல்லிய இந்த படம் தமிழ் சினிமாவின் வித்தியாசமான படங்களில் ஒன்றாக இருக்கிறது. இது பல்வேறு சமூகத் தடைகளை நிவர்த்தி செய்தது மற்றும் பாரம்பரிய நெறிமுறைகளுக்கு சவால் விடும் வகையில் இருந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்திருந்தார்.
ஆயிரத்தில் ஒருவன்
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா ஜெர்மியா, ரீமாசென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த ஆயிரத்தில் ஒருவன் படம், நிகழ்காலத்தை. வரலாற்றுப் புனைகதைகளை புகுத்தி கற்பனைக் கூறுகளுடன் அமைந்திருந்தது. இது வழக்கத்திற்கு மாறான கதைசொல்லல் மற்றும் காட்சி அமைப்புகளுக்காக இன்னும் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
அந்நியன்
ஷங்கர் இயக்கிய, திரைப்படம் அந்நியன். விக்ரம் மற்றும் சதா முக்கிய வேடங்களில் நடித்த இந்த படம் 2005 இல் வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படம் ஒரு முக்கிய தமிழ்த் திரைப்படத்தில் பல ஆளுமைகளின் சிக்கலைக் குறிப்பிட்டது, இந்த காலத்திற்கு மிகவும் அசாதாரணமானது. இது நீதி மற்றும் சமூக பிரச்சனைகளின் அடிப்படையில் திரைக்கதை அமைக்கப்பட்ட ஒரு படம். இந்த படம் தற்போதுவரை பலரின் விருப்பமாக படமாக உள்ளது.
ரோஜா
மணிரத்னம் இயக்கத்தில், அரவிந்த் சுவாமி மற்றும் மதிபாலா நடித்த படம் ரோஜா. 1992 இல் வெளியான இந்த படம், தொழில்நுட்ப புத்திசாலித்தனம், கதைசொல்லல் மற்றும் பயங்கரவாதத்தின் பின்னணியில் எல்லை தாண்டிய உறவுகளின் முக்கியத்துவத்தை சித்தரித்தவிதம் ஆகியவற்றின் அடிப்படையில் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. தற்போதுவரை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படம் ரோஜா.
அருவி
அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் 'அருவி'. இத்திரைப்படம் சுற்றுச்சூழல் சீரழிவு, சமூகப் பழக்கவழக்கங்கள் மற்றும் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட தனிநபர்களின் போராட்டங்கள் போன்ற பல சமகாலப் பிரச்சினைகளை பற்றி பேசியது. படத்தின் தைரியமான அணுகுமுறையும் யதார்த்தமான சித்தரிப்பும் அதைத் தனித்து நிற்கச்செய்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“