விஜய் படத்தை ரீமேக் செய்ய தெலுங்கு ரசிகர்கள் எதிர்ப்பு
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றிப்படமாக மாறியது தெறி. இந்த படம் போலீசோடு என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்து வெளியிடப்பட்ட நிலையில், பலமுறை டிவி சேனல்களிலும் ஒளிபரப்பி, தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. இதனிடையே தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கல்யான் அடுத்து தெறி படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் தெறி படத்தை ரீமேக் செய்தால் தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் குறித்து பேசிய காயத்ரி ரகுராம்
நடன இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் நாயகியாக நடித்தவர் காயத்ரி ரகுராம். விசில், பரசுராம், விகடன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றார். இதனிடையே திருமணமாகி 2 வருடங்களில் விவாகரத்து பெற்றது ஏன் என்று கூறியுள்ள இவர், 22 வயதில் எனக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால் சில வருடங்களில் விவாகரத்து ஆனது இதில் இருவரையுமே குற்றம் சொல்ல முடியாது. விவாகரத்துக்கு பின் அவர் தனது பணிக்காக சென்றுவிட்டார். நான் எனது வேலையை பார்க்கிறேன். திரும்ப திரும்ப இதை பற்றி கேட்ட ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார்.
சூர்யா மீண்டும் சிங்கம் இயக்குனருடன் இணைகிறாரா?
பாலா இயக்க்தில் வணங்கான் படத்தில் நடித்து வந்த சூர்யா சமீபத்தில் அந்த படத்தில் ஏற்பட்ட கதை மாற்றத்தின் காரணமாக தானும் தனது தயாரிப்பு நிறுவனமும் அதில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்திருந்தார். அதேபோல் பாலாவும் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறியிருந்தார். இதனிடையே வணங்கான் படத்திற்கு பதிலாக சூர்யா இயக்குனர் ஹரியுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சூர்யா – ஹரி கூட்டணியில் அருவா படம் அறிவிக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது இவர்கள் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே நேரத்தில் அப்பா மகனுடன் நடிக்கும் ஐஸ்வர்யா லட்சுமி
தமிழில் விஷால் நடிப்பில் வெளியாக ஆக்ஷன் படத்தின் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா லட்சுமி தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான மம்முட்டி துல்கர் சல்மான் படங்களில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார்.
அழுத்தமாக கேரக்டரில் கீர்த்தி சுரேஷ்
தமிழில் மாமன்னன் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் போலோ சங்கர் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தற்போது ரகு தாத்தா என்ற புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஒரு பெண் தனது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக எடுக்கும் போராட்டமே கதை என்று கூறப்படுகிறது. கேஜிஎஃப், காந்தாரா படங்களை தயாரித்த ஹோம்பாளே பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.