/tamil-ie/media/media_files/uploads/2023/07/Maaveeran-1.jpg)
மாவீரன் சிவகார்த்திகேயன்
மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், இந்த படம் எப்படி உள்ளது என்பது குறித்து அமைச்சர் உதயநிதி வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகரான உயர்ந்த சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பிரின்ஸ். ஒரு நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இந்த படம் போதிய வரவேற்பை பெற்றாத நிலையில், தற்போது அவர் நடிப்பில் இன்று (ஜூலை 14) வெளியாகியுள்ள மாவீரன் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ள நிலையில் வில்லனாக இயக்குனர் மிஷ்கின், சிவகார்த்திகேயனின் அம்மாவாக பழம்பெரும் நடிகை சரிதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மட்டும் கேட்டுகும் ஒரு குரலுக்கு நடிகர் விஜய் சேதுபதி டப்பிங் கொடுத்துள்ளார்.
இந்த படத்தை நெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பொதுவாக இந்நிறுவனம் வெளியிடும் படங்கள் குறித்து உயநிதி ஸ்டாலின் கருத்து சொல்வது வழக்கமாக நடைபெறும் ஒரு நிகழ்வு. அந்த வகையில் தான் நடிக்க வேண்டிய டான் படத்தை சிவாகார்த்திகேயன் நடித்திருந்த நிலையில், அந்த படத் பார்த்த உதயநிதி படம் சுவாரஸ்யமாக இல்லை என்று கூறியுள்ளார்.
ஆனாலும் டான் படம் சிவகார்த்திகேயனின் முக்கிய படங்களில் ஒன்றாக ஆகிவிட்டது. இதை பார்த்த உதயநிதி, அந்தப் படத்தின் வெற்றி ஆச்சரியமாக இருந்ததாக பேசியிருந்தார். அதேபோல் தற்போது மாவீரன் படத்தை வெளியிட்டுள்ள உதயநிதி படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் படம் நன்றாக இருப்பதற்கு அடையாளமாக தம்ஸ் அப் எமோஜியை பதிவிட்டுள்ளார். இதனால் படத்தின் வெற்றி உறுதி என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.