Advertisment

சாதி பெயரை நீக்கியது ஏன்? விளக்கம் கொடுத்த வாத்தி நாயகி: சம்யுத்தா சிறப்பு நேர்காணல்

வெங்கட் அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்த வாத்தி படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து சம்யுக்தா பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
சாதி பெயரை நீக்கியது ஏன்? விளக்கம் கொடுத்த வாத்தி நாயகி: சம்யுத்தா சிறப்பு நேர்காணல்

தெலுங்கில் வெளியான பிம்பிசாரா, பீமலா நாயக், மலையாளத்தில் வெளியான கடுவா, மற்றும் காலிபட்டா 2 ஆகிய படங்கள்  பிளாக்பஸ்டர்கள் படங்களாக அமைந்த நிலையில், இந்த அனைத்து படங்களுக்கும் பொதுவாக உள்ள மற்றொரு வெற்றி காரணி நடிகை சம்யுக்தா. தென்னிந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான இவர், மலையாளத் திரையுலகில் நடித்து வருகிறார்.

Advertisment

அதே சமயம் கடந்த இரண்டு ஆண்டுகளில், சம்யுக்தா மற்ற அனைத்து முக்கிய தென்னிந்தியத் தரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். இதில் தற்போது தற்போது தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வாத்தி படத்தின் படத்தில் நாயகியாக நடித்திருக்காறார். இந்த படத்தின் வெளியீட்டுக்காக காத்திக்கும் சம்யக்தாவை சந்தித்தோம்.

இந்த உரையாடலில், அவர் நடிகர் தனுஷுடன் பணிபுரிந்த அனுபவம், தனது குடும்பப்பெயர், வதந்திகள் உள்ளிட்ட பல தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

தொடர்ந்து நல்ல படங்களை எப்படி தேர்வு செய்கிறர்கள்?

இது எனக்கு நடக்கிறது. நான் நடிக்கும் படங்கள் குறித்து மிகவும் மகிழ்ச்சியடையாத ஒரு காலம் இருந்தது, ஆனால் நான் புதிதாக சில முயற்சிகள செய்ய வேண்டியிருந்தது. எனக்கு என் அம்மாவும் பாட்டியும் இருக்கிறார்கள், அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். எனவே, நான் பெருமைப்படக்கூடிய படங்களில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன், அது இறுதியாக நடக்கிறது. சில சமயங்களில் என் உள்ளுணர்வும் கூட இதற்கு காரணம்.

நான் பிம்பிசாராவுக்கு ஒப்பந்தம் செய்தபோது, அது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இல்லை, ஆனால் அது வெளியானவுடன் பிளாக்பஸ்டர் ஆனது. ஆனால் இந்த படம் முதல் நாளிலிருந்தே நன்றாக நல்ல விமர்சனங்களை பெறும் என்று நம்பினேன்.

வாத்தி படத்தில் நீங்கள் உயிரியல் ஆசிரியராக நடிக்கிறீர்கள், இது கல்வி முறையின் சிக்கல்களைப் பற்றியது. அதில் உங்கள் கருத்து என்ன?

நான் பள்ளியில் படிக்கும் போது, இந்த அமைப்பு மாணவர்களிடம் சிறந்ததை வெளிப்படுத்தவில்லை என்று நான் எப்போதும் உணர்ந்தேன். கற்பிக்க வேண்டிய விஷயங்கள் கற்பிக்கப்படவில்லை. உயிரியல், கணிதம் போன்ற செட் பாடங்களுக்கு அப்பால் ஆராய விரும்பும் ஒருவருக்கு கட்டமைப்பு மிகவும் கடினமானது என்று நினைத்தேன், அறிவாளியாக மாறுவதற்கு மரபுவழிக் கல்வியைப் பெற வேண்டிய அவசியமில்லை என்று நம்புகிறேன். நான் ப்ளஸ் டூ வரை தான் படித்தேன், மகிழ்ச்சியாக இருக்கிறேன். வாசிப்பு மற்றும் மக்களுடன் பழகுவதன் மூலமும் கல்வி பெற முடியும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது என்னுடைய உலகக் கண்ணோட்டம் மட்டுமே. வாத்திக்குப் பிறகு, வாழ்க்கையில் மேலே வருவதற்குப் போராடும் பலருக்கு மரபுவழிக் கல்வி எப்படி உதவும் என்பதையும் உணர்ந்தேன்.

publive-image

பள்ளிப்படிப்புக்குப் பிறகு கல்வியைத் தொடர வேண்டாம் என்று நீங்கள் தேர்வுசெய்தது, இப்போது நீங்கள் ஒரு பள்ளி ஆசிரியராக நடிப்பது சுவாரஸ்யமானது.

அதுதான் என் பார்வையில் நடிப்பு மிகவும் சுவாரஸ்யமாகத் தெரிகிறது. நிஜ வாழ்க்கையில் நீங்கள் செய்யாத விஷயங்களை நீங்கள் செய்ய முடியும். நீங்கள் இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் நுழைந்து, கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்ட் மற்றும் உங்கள் கற்பனையின் அடிப்படையில் அதை நடிப்பது ஒரு சிறந்த அனுபவம்.

இரண்டு இயக்குனர்களுடன் ஒரு படத்தில் நடித்தது எப்படி இருந்தது? வெங்கட் அட்லூரி தவிர, தனுஷே ஒரு இயக்குனர்.

சமுத்திரக்கனி சாரும் படத்தின் ஒரு பகுதியாக இருந்ததால் உண்மையில் மூன்று இயக்குனர்கள் இருந்தனர் (சிரிக்கிறார்). ஆனால் வாத்தி வெங்கட் அட்லூரியின் ஒரு கண்ணோட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. வெங்கி தனது வேலையை அழகாக செய்யும் போது தனுஷ் வேலையில் தலையிட மாட்டார். ஆனால் தனுஷ் எனக்கு காட்சிகளுக்கான உள்ளீடுகளை கொடுத்தார், இயக்கம் எதுவும் செய்யவில்லை.

தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட நடிகர்கள் ஒத்துழைக்கத் தொடங்கி, ஆர்.ஆர்.ஆர் கோல்டன் குளோப்ஸ் வென்று ஆஸ்கார் விருதைப் பார்க்கும்போது, தென்னிந்தியாவில் நடிகையாக இருப்பதற்கான சிறந்த நேரம் இது என்று நினைக்கிறீர்களா?

கண்டிப்பாக. 80கள் அல்லது 90களில் நான் ஒரு நடிகைாக இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன், ஏனென்றால் அந்த சகாப்தத்தில் ஸ்கிரிப்ட்கள் ஆழமாகவும் பெரிய நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்டதாகவும் உணர்ந்தேன், மேலும் சினிமா என்றால் என்ன என்பதில் இந்த பெரிய புதிய ஈர்ப்பு இருந்தது. அப்போ, நடிகனா இருந்தா நல்லா இருந்திருக்கும்னு ஆசைப்பட்டேன், ஆனா இப்போ நம்ம சினிமா உலகத்துல போகுது. மேலும், ஒரு வெற்றிகரமான நடிகை எல்லா முன்னணி சூப்பர்ஸ்டார்களுடனும் நடித்து மழுங்கடிப்பார் என்ற பழைய கான்செப்ட் போய்விட்டது. தற்போது, முன்னணி நடிகையாக இருப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நடிகைகள் நிரூபித்து வருகின்றனர், மேலும் ஒருவர் தான் என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம்., நீங்கள் சொன்னது போல் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நடிகர்களின் பல ஒத்துழைப்புகள் நடக்கின்றன. ஃபஹத் பாசில் புஷ்பா படத்தில் நடித்தார். பிருத்விராஜ் சலாரில் இருக்கிறார். இந்தியத் திரையுலகம் எப்போதுமே பாலிவுட்டுடன் ஒத்ததாக இருந்தது, ஆனால் இப்போது அது மாறிக்கொண்டிருக்கிறது, அது அனைத்தும் ஒன்றாக இருக்கும் காலத்திற்காக காத்திருக்கிறேன்.

தலைப்பு அட்டைகள் மற்றும் பிற இடங்களில் உங்கள் குடும்பப்பெயர் சேர்க்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை இந்த உணர்வு எப்போது ஏற்பட்டது?

இது வெகு காலத்திற்கு முன்பு நடந்தது. எனது குடும்பப் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று நான் தயாரிப்பு நிறுவனங்களிடம் மற்றும் அனைவரிடமும் ஒரு வருடமாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனாலும், என்னை சம்யுக்தா மேனன் என்று அழைக்கிறார்கள். படங்களில் ஒப்பந்தம் செய்யும் போது கூட, நான் சம்யுக்தா என்று மட்டுமே அழைக்கப்பட வேண்டும் என்று அவர்களிடம் கூறுவேன், ஆனால் அவர்கள் அதை அகற்றவில்லை என்பது அவர்களின் தலையில் மிகவும் பதிந்துள்ளது. எனவே, வாத்தி படத்தின் ப்ரமோஷனுக்காக சென்னை வந்தபோது, ஒரு உரையாடலின் போது, ஒரு பத்திரிகையாளர் என்னை சம்யுக்தா மேனன் என்று அழைத்தார், மேலும் அந்த நபரை சம்யுக்தா என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொண்டேன், அது செய்தியாகவும் விவாதமாகவும் மாறியது. முழு ஜாதி அமைப்பும் ஒழிய வேண்டும் என்பதற்காக விவாதம் நடப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் அந்த விவாதத்தை கொண்டு வருவதில் நானும் ஒரு பங்கை விளைவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நீங்கள் வாத்தி படத்தை விட்டு வெளியேறிவிட்டீர்கள் என்று வதந்திகள் பரவின. இதுபோன்ற விஷயங்களை நீங்கள் எவ்வாறு கையாளுகிறீர்கள்?

நான் அதை மிகவும் மகிழ்ந்தேன், ஏனென்றால் யாராவது அதை ஏன் செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு விதத்தில் எனக்கு லைம்லைட் கொடுத்தது. ஆனால் அது நல்ல விளம்பரம் இல்லை. அதுவரை என்னைப் பற்றிய மிகப்பெரிய வதந்தி. மலையாள சினிமாவில், வதந்திகள் வருவது மிகவும் கடினம், அதனால், நான் பெரிதாக எதிலும் பங்கேற்கவில்லை. எனவே, இது சற்று புதியதாக இருந்தது, ஆனால் நான் அதற்குப் பழகிவிட்டேன், அது இனி என்னைப் பாதிக்காது. இந்த வதந்திகள் பற்றிய சமூக ஊடக கருத்துகள் மற்றும் அனைத்தையும் நான் பின்பற்றும் ஒரு காலம் இருந்தது. இப்போது, அதற்கு எனக்கு நேரமில்லை. நான் செய்தாலும், நான் அவற்றைப் பார்க்கப் போவதில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment