தமிழ் சினிமாவில் பல வகைகளில் காமெடி செய்து சிரிக்க வைத்த நடிகர் வடிவேலு, இந்த காமெடியில் நான் நடிக்க முடியாது என்று சொல்லி விருப்பமே இல்லாமல் நடித்த காமெடி பெரிய வெற்றி பெற்றுள்ளது.
Advertisment
தமிழ் சினிமாவில் காமெடி குணச்சித்திரம், நாயகன் என பல விதங்களில் அனைவரையும் சிரிக்க வைத்தவர் நடிகர் வடிவேலு. இவர் நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், வடிவேலு இல்லாமல் இன்றைய காலகட்டத்தில் மீம்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவரது காமெடி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், அர்ஜூன், சத்யராஜ், பிரபு பார்த்தீபன், சரத்குமார் உள்ளிட்ட பலருடன் இணைந்து சிறப்பாக காமெடியை கொடுத்துள்ள வடிவேலு அர்ஜூனுடன் இணைந்து நடித்த கிரி படத்தின் காமெடி காட்சிகள் பெரிய வெற்றியாக அமைந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து காமெடி காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம்.
வடிவேலு - அர்ஜூன் கிரி படம்
அதிலும் குறிப்பாக அக்காவை வைத்து பேக்கிரி வாங்கிய காமெடி இன்றைக்கும் வடிவேலு காமெடி காட்சியில் பேசப்படும் ஒரு காமெடியாக உள்ளது. ஆனால் இந்த காமெடி ஷூட் செய்யும்போது இது என்ன அக்கா என்றெல்லாம் சொல்றீங்க இது வேண்டாம் என்று இயக்குனர் சுந்தர்சியிடம் வடிவேலு கூறியுள்ளார். அதை கேட்ட சுந்தர்சி வடிவேலு உனக்கு அக்கா இருக்கா, இல்லனா எனக்கு ரெண்டு அக்கா இருக்கு தைரியமா நடி நல்லா இல்லனா சித்தினு மாத்திக்கலாம் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு வேண்டா வெறுப்பாக நடித்த வடிவேலுவுக்கு இந்த காமெடி காட்சி ஒரு அடையாளமாகவே மாறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து இயக்குனர் சுந்தர்.சி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளா.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.