சுருட்டு பிடிக்கும் மிரட்டல் அதிகாரி : கடைசி தோட்டாவை நம்பி வனிதா விஜயகுமார்

கொடைக்கானல் மற்றும் பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது

கொடைக்கானல் மற்றும் பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vanitha Vijayakumar

வனிதா விஜயகுமார்

கடைசி தோட்டா படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வரும் நடிகை வனிதா விஜயகுமார் சுருட்டு பிடிப்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது இணைதய்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-என்டரி கொடுத்துள்ள வனிதா விஜயகுமார் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், உருவாகும் ’கடைசி தோட்டா’ படத்தில் வனிதா விஜயகுமார் நடித்து வருகிறார். இயக்குநர் நவீன் இயக்கி வரும் இந்த படத்தில் வனிதா காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

மேலும், இந்த படத்தில் ராதாரவி, ஸ்ரீகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், வையாபுரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். காவல்துறை அதிகாரியாக மிரட்டும் வனிதா விஜயகுமார் இந்த படத்தில் சுருட்டு பிடிக்கும் மிரட்டலான காட்சியில் அதிரடியாக நடித்திருக்கிறார். இவரின் கேரக்டர் படததில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என படக்குழு எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

கொடைக்கானல் மற்றும் பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vanitha Vijayakumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: