துணிவு படத்தை வெளியிடும் ரெட்ஜெயிண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாரிசு படத்திற்கு அதிக திரையரங்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்கபோவதாக படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ கூறியுள்ளார்
விஜய் நடிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் இயக்கியுள்ள படம் வாரிசு. தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியாக ரஞ்சிதமே, தீ தளபதி என இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வாரிசு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ளது. இதே நாளில் அஜித் நடிகப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள துணிவு படமும் வெளியாக உள்ளது. உண்மை சம்பவத்தை தழுவி திரைக்கதை அமைச்சப்பட்டுள்ளதாக கூறப்படும் துணிவு படத்தில் மஞ்சு வாரியார் சமுத்திரக்கனி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசைமைத்துள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தில் இருந்து ஏற்னகவே வெளியானி சில்லா சில்லா என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். அதேபோல் வாரிசு படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்நிலையில், வாரிசுக்கு முன்பே துணிவு படத்தின் வியாபாரத்தை தொடங்கிவிட்ட உதயநிதி, ஸ்டாலின் இரு படத்திற்கும் சம அளவு தியேட்டடர்கள் ஒதுக்கப்படும் என்று கூறியிருந்தாலும், தற்போது 80 சதவீத தியேட்டகளை துணிவு கைப்பற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ஃ இதனால் வாரிசு படத்திற்கு தமிழகத்தில் குறைவான தியேட்டர்களே கிடைத்துள்ளது.
இதனிடையே சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ, அஜித்துடன் ஒப்பிடும்போது விஜய்தான் நம்பர் ஒன். ஆனால் வாரிசு படத்திற்கு குறைந்த அளவு தியேட்டர்களே ஒதுக்கப்பட்டுள்ளது. இது வியாபாரம். நான் சென்னைக்கு சென்று உதயநிதியை சந்தித்து வாரிசு படத்திற்காக கூடுதல் திரையரங்கு ஒதுக்குவது குறித்து பேசப்போகிறேன் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil