சிம்பு 48 நாயகி இவரா?
வெந்து தனிந்தது காடு படத்திற்கு பின் நடிகர் சிம்பு தற்போது பத்து தல என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் 30-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், சிம்பு அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக எஸ்டிஆர் 48 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இந்த படத்தில், நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா மற்றும் திஷா படானி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் படத்தில் நயன்தாரா
லைகா தயாரிப்பில் அஜித்
லியோவை தொடர்ந்து அட்லி படத்தில் சஞ்சய் தத்
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் முக்கிய வில்லன் கேரக்டரில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்து வருகிறார். இவரது காட்சிகள் தொடர்பான படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தில் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வரும் நிலையில் தற்போது சஞ்சய் தத் இணைந்துள்ளார்.
சிம்புவுக்கு போட்டியாக வெற்றிமாறன்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ள படம் விடுதலை. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் வரும் மார்ச் 31-ந் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில், இதற்கு ஒருநாள் முன்னதாக மார்ச் 30-ந் தேதி சிம்பு நடிப்பில் பத்து தல படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் கர்ணன் கூட்டணி
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்து தனுஷ்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/