New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/29/vijay-antony-2025-06-29-14-14-25.jpg)
விஜய் ஆண்டனி, தற்போது மார்கன் என்ற படத்தில் நடித்துள்ளார். எடிட்டராக இருந்த லியோ பால் ஜான் என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
தமிழ் சினிமவில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்ட விஜய் ஆண்டனி நடிப்பில், தற்போது வெளியாகியுள்ள மார்கன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது இந்த படத்திற்காக ப்ரமோஷன் செய்யப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
2005-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய ஆண்டனி. அதன்பிறகு பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், 2012-ம் ஆண்டு வெளியான நான் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்து, சலீம், இந்தியா பாகிஸ்தான் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த படங்களும் வெற்றியை கொடுத்தது.
விஜய் ஆண்டனியின் திரை வாழ்க்கையில்அவருக்கு பெரிய திருப்புமுனை கொடுத்த படம் என்றால் அது பிச்சைக்காரன் தான். சசி இயக்கத்தில் வெளியான இந்த படம், விஜய் ஆண்டனி திரை வாழ்க்கையில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்து பிச்சைக்காரன் படத்தின் 2-ம் பாகத்தை இயக்கி இயக்குனராகவும் வெற்றி கண்ட விஜய் ஆண்டனி, தற்போது மார்கன் என்ற படத்தில் நடித்துள்ளார். எடிட்டராக இருந்த லியோ பால் ஜான் என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
விஜய் ஆண்டனியுடன், சமுத்திரக்கனி, பிரகிடா, வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிரைம் இன்விஸ்டிகேஷன் த்ரில்லர் பாணியின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படம், ஜூன் 27-ந் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படம் வெளியீட்டுக்கு முன்னதாக விஜய் ஆண்டனி ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்ற வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
போதுவாக ஒரு படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி வெளியூரில் நடந்தால், விமானம் மற்றும் காரில் தான் செல்வார்கள். ஆனால் விஜய் ஆண்டனி தனது படக்குழுவினருடன், சொகுசு பேருந்தில் திருச்சி, தஞ்சாவூர், மதுரை கோயம்புத்தூர் ஆகிய ஊர்களுக்கு சென்றுள்ளார். பேருந்தில் செல்லும்போது எடுத்த வீடியோ பதிவு தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில், அஜய் திஷான் என்பவர் அறிமுக நடிகராக வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் இந்த பேருந்து பயணம் ஒரு நேர்காணல் போன்று அமைந்துள்ளது.
இதில் தொகுப்பாளர் கேள்வி கேட்க, படக்குழுவினர் பதில் சொல்கின்றனர். ஒரு படத்தை எப்படி குறைந்த செலவில் ப்ரமோஷன் செய்ய வேண்டும் என்பது குறித்து படக்குழுவினர் தயாரிப்பாளர்களுக்கு கூறியுள்ளனர். வில்லன் கேரக்டரில் நடித்த நடிகர் அஜய் திஷானிடம், முதல் படத்திலேயே 5 ரேப் சீன், 4 கொலை இருக்கு. இந்த வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. இதை எப்படி நினைக்கிறீங்க, இந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்று கேட்கப்பட்டது.
இதை கேட்ட அஜய் திஷான், ரொம்ப பெருமையாக இருக்கிறது. இந்த மாதிரி ஒருத்தை கூப்பிட்டு வச்சி, 5 பொண்ணுங்க முன்னாடி கேட்கிறீங்களே என்று சொல்ல, ஹோம்வொர்க் எதாவது பண்ணீங்களா என்று கேட்க அவர் இல்லை என்று பதில் சொல்கிறார். இதை கேட்டு அனைவரும் சிரிக்கின்றனர். அதன்பிறகு, மார்கன் பெயருக்கு அர்த்தம் தெரியுமா என்று கேட்டுவிட்டு அர்த்தம் கேட்க கூடாது. மாக்காயாலாவுக்கு அர்த்தம் கேட்டிங்களா? படத்தை பாருங்க அர்தம் புரியும் என்று கூறியுள்ளர்.
இறுதியாக பேருந்து பயணம் சரியில்லாமல் நடிகை பிரகிடா வாமிட் எடுக்க, சோர்வாக படுத்திருக்கிறார். இத்துடன் இந்த வீடியோ பதிவு முடிகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.