திருமணம் ஆகி 14 ஆண்டுக்குப் பிறகு பெண் குழந்தை தத்து எடுத்த பிரபல நடிகை: காரணம் பற்றி அவரே விளக்கம்

திருமணமாகி 14 ஆண்டுகளுக்கு பின் பெண் குழந்தையை தத்தெடுத்தது குறித்து நடிகை அபிராமி மனம் திறந்து பேசியுள்ளார்

திருமணமாகி 14 ஆண்டுகளுக்கு பின் பெண் குழந்தையை தத்தெடுத்தது குறித்து நடிகை அபிராமி மனம் திறந்து பேசியுள்ளார்

author-image
WebDesk
New Update
Abirami

நடிகை அபிராமி கணவர் மற்றும் குழந்தை கல்கியுடன்

பட்ஜெட் பட்மநாபன், விருமாண்டி உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை அபிராமி, திருமணமாகி 14 ஆண்டுகள் கழித்து குழந்தையை தத்தெடுத்தது ஏன் என்பது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை அபிராமி கடந்த 1995-ம் ஆண்டு மலைாயளத்தில் வெளியான கதாபுருஷன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர். அதன்பிறகு 1999-ம் ஆண்டு சுரேஷ்கோபி நடிப்பில் வெளியான பத்ரம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தான் கல்லூரியில் படிக்கும்போதே சின்னத்திரையில் தொகுப்பாளியாக இருந்த அபிராமிக்கு பத்ரம் படம் பெரிய வெற்றியை கொடுத்தது.

தொடர்ந்து அர்ஜூன் நடிப்பில் வெளியான வாணவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அபிராமி, அதன்பிறகு தோஸ்த், சமுத்திரம், சார்ளி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்திருந்தார். கடந்த 2004-ம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான விருமாண்டி படம் அபிராமிக்கு பெரிய திருப்புமணையாக அமைந்தது.

விருமாண்டி படத்திற்கு பின் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட அபிராமி அங்கு வேலையும் செய்து வந்துள்ளார். தொடர்ந்து 2014-ம் ஆண்டு ராகுல் என்பரை திருமணம் செய்துகொண்ட அபிராமி அதே ஆண்டு மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அடுத்து ஜோதிகாவின் ரீ-என்டரி படமான 36 வயதினிலே படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து தமிழிலும் ரீ-என்டரி ஆன அபிராமி விஸ்வரூபம் படத்தில் நடிகை பூஜா குமாருக்கு டப்பிங் பேசியிருந்தார்.

Advertisment
Advertisements

தற்போது தமிழ் தெலுங்கு மாலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வரும் அபிராமி திருமணமாகி 14 வருடங்களுக்கு பிறகு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்ததாகவும், அந்த குழந்தைக்கு கல்கி என்று பெயரிட்டுள்ளதாகவும் சமீபத்தில் கூறியிருந்த நிலையில், தற்போது குழந்தையை தத்தெடுத்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள அபிராமி சிறு வயதில் இருந்தே ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் அதைத்தான் செய்தேன். அதேபோல் கல்கி ஒரு அவதாரம், அதை நான் பெண்ணாக பார்க்கிறேன், பெண்ணால் தான் அனைத்தையும் மாற்ற முடியும் அதனால் தான் என் மகளுக்கு கல்கி என்று பெயரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: