உதயநிதி வடிவேலு நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள மாமன்னன் படம் குறித்து ரசிகர்கள் பலரும் இணையதளங்களில் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களில் மூலம் கவனம் ஈாத்த இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 3-வது படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத்பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயின்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
அரசியல் த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாமன்னன் படம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜூன் 29) வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்த ரசிகர்கள் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மாமன்னன் படம் வெளியாகும் முதல் நாள் சக நடிகர்கள் பலரும் இந்த படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்த நிலையில், படத்தின் இடைவேளை சீன் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நடிகர் தனுஷ் ட்விட் செய்திருந்தார். அதேபோல் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குனர் மாரி செல்வராஜூக்கு வாழ்த்துக்கள் சொல்லி ட்விட்டரில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“